Sunday, 21 August 2016

என் கனவுகளின் கவிதை அவள்

என் செல்ல மகளின் 25வது பிறந்த நாள்.


என் கனவுகளின் கவிதை அவள்
உணர்வுகளின் ஊற்று அவள்-என்
உயிரோடு உயிராய் அவள்
நனவின் மீதியாய் நாள்தோறும்
என்னுள் கனன்று நிக்கும் நெருப்பாய் அவள்

சித்திரை பதினேழு
ஒரு வசந்தத்தின் வரவு  அவள்
இப்போதும் எப்போதும்
என்னுள் வசந்தமாய் அவள்

என் கனவுகளின் நாயகி
ஒரு காவியத்தின் தலைவி
ஓவியத்தின் உச்சாணி

ஒரு கவிதையாய்
ஒரு கதையாய்
ஒரு காவியமாய்
எப்போதும் அவள்

No comments:

Post a Comment