Saturday, 20 August 2016

நீ
இல்லாத
என் ஊர்

ஊருக்கு போவதென்றால்
அலாதிப் பிரியம்
உனக்கு

சேனையூர் என்றால்
சிறகடித்து
பறப்பாய்

உன்
சாகசங்களுக்கு

இளவரசியாய்
நீ
உலா வந்த
நாட்களவை

வயலும் வரப்பும்
ஆறும் களியும்
உன்
கனவின் மீதியாய்
இப்போதும்
அப்படியேதான்
உள்ளன

ஆனால்
நீ
இல்லை
உன்
பூட்டியாச்சியும்
இல்லை

No comments:

Post a Comment