Friday, 12 August 2016

குளிரில் உலர்ந்த என் உதடுகள்

குளிரில் உலர்ந்த
என் உதடுகள்
பின்னர் பனியில்
காய்ந்து
வெய்யிலில் குளிர்ந்து
மரத்து போகும்

குளிரின் சிலிர்பை
உணர மறுக்கும்
மனம்
பனியின் அழகை
ரசிக்கவியலாத
புளுக்கம்
வெய்யிலை மட்டும்
நாடுகிறது

அதிகாலை
இங்கு
புல் நுனியெங்கும்
பனித் துளி
கிளர்ந்தெளவில்லை
மனம்
கிளர்ச்சிகளற்று
வேலைக்காய்
ஓடும்
கால்கள்

எல்லாம்
வெறுமையாய்
எதுவும் பிடிபடவில்லை
மனிதர்கள்
மரங்கள்
எல்லாமே

நாதியற்று
இங்கு
ஒடும் நீன் நதி
வெறுப்பின்
உச்சமாய்
என்னுள்

இது
ஏக்கத்தின்
நீட்சியா?

No comments:

Post a Comment