கண்ணகி வழக்குரை
சிலப்பதிகாரம் தமிழில் எழுந்த மிகப் பழைய காப்பியம்.
நற்றிணையில் வரும் ''ஒருமுலை திருகிய திருமாவுன்னி'' கண்ணகி பற்றிய முதல் செய்தியாய் வர

ஈழத்திலெழுந்த மிகப் பெரும் காப்பியமாக நாம் ''கண்ணகி வழக்குரை '' இலக்கியத்தை பார்க்கலாம்.2226 செய்யுட்களை கொண்டுள்ளது.
கண்ணகி வழக்குரை என கிழக்கு மாகாணத்திலும்,கோவலனார் கதை என யாழ்ப்பாணத்திலும் ,சிலம்பு கூறல் என வன்னியிலும் சில பாட வேறுபாடுகளுடன் வழக்கில் உள்ளது.

கிழக்குப் பல்கலைக்கழக தமிழ்த்துறை தங்கள் பாடத்திட்டத்தில் கண்ணகி வழக்குரையயை இணைத்துள்ளது.
கிழக்குமாகாண கண்ணகி கோயில்களில் கண்ணகி வழக்குரை வைகாசி சடங்கு நாட்களில் நாள்தோறும் படிக்கப்படுகிறது .
தம்பிலுவில் கண்ணகி கோயில் ,காரைதீவு கண்ணகி கோயில் ஆகியவற்றில் இது சிறப்பான நிகழ்வாக அமைகிறது
.
2)கப்பல் வைத்த காதை (மீகாமன் கதை) (துரியோட்டு) (கப்பல் வதை;தல்),
3)கடலோட்டு காதை (வெடியரசன் போர்) (நீலகேசி புலம்பலும் வீரநாரணன் கதையும்) (மணிவாங்கின கதை) (விளங்குதேவன் போர்),
4)கலியாணக் காதை,
5)மாதவி அரங்கேற்று காதை,
6)பொன்னுக்கு மறிப்புக் காதை (பொன்னுக்கு மறிப்பு) (இரங்கிய காதல்),
7)வழிநடைக்காதை (வயந்தமாலை தூது) (வழிநடை), 8)அடைக்கலக் காதை,
9)கொலைக்களக் காதை (சிலம்பு கூறல்) (கொலைக்களக் காதை) (அம்மன் கனாக்கண்ட கதை) (உயிர்மீட்புக் கதை), 10)வழக்குரைத்த காதை,
11)குளிர்ச்சிக்காதை (குளிர்ச்சி) (வழக்குரை காவியம்)
என பதினொரு காதைகளுடன் முடிவடைகிறது.
வரம்பெறு காதை
கோவலனின் பிறப்பையும் கண்ணகியின் பிறப்பையும் கூறுகிறது.
கண்ணகியின் பிறப்பை சிலப்பதிகாரத்திலிருந்து வேறுபட்டு அம்மன் பிறந்த காதை என கண்ணகியயை பிறப்பிலேயே அம்மனாக சித்தரிக்கிறது.
கப்பல் வைத்த காதை ,கடலாடு காதை என இரண்டு காதைகளும் சிலப்பதிகாரத்திலிருந்து வேறுபட்டு சோழநாடு ,ஈழநாடு என புதிய கதை களங்களையும் ,மீகாமன் வெடியரசன் என புதிய பாத்திரங்களையும் கொண்டு வருகிறது.
அரங்கேற்று காதை
கிழக்கு மாகாண கூத்து மரபின் பண்புகள் வெளிப்படும் படியாக மாதவியின் ஆட்டச் சிறப்பு பேசப் படுகிறது.
கூத்து தாளக் கட்டுக்கள் இங்கு நேரடியாகவே பயன் படுத்தப் படுகிந்றன.
''தத்தி தோம் ததிங்கிண தோம்
தக்குண தக்குண தக்கிண தோம்
திதித் திகு திகு செங்கிட தங்கிட
செங்கிட செங்கிட தாகிட தோம்
ஒற்றை சுற்றுடன் உய்ப்ப முழவொடு
உற்ற இடக்கையுடன் விதமும்
வைத்து சித்திர உற்ற நடிப்பொடு
மாதவி சோழன் முன்னாடினளே'' (283ம் பாடல்)
தக தக திகு திகு திமிகிட திமிகிடதாந்
தளங்கு தளங்கு தளங்கு திமிதகதோம்
திகுதக திகுதக திக்குட தரிகிட
திக்குண தகுசெக செககிண தோம்'' (253ம் பாடல்)
இதனை விட கிழக்குமாகாண பேச்சு தமிழும் பல இடங்களில் கையாளப் படுகிறது.
சிலப்பதிகாரம் சிலம்பை முதன்மைப் படுத்த
வழக்குரைத் பகுதியயை முதன்மைப் படுத்தி கண்ணகி வழக்குரை சிறப்பு பெறுகிறது.
சிலப்பதிகாரம்
நீர்ப்படைகாதையின் மூலம் கண்ணகிக்கு விழாவெடுத்து கோயில் கட்டி வழிபடுதலோடு முடிவடைய .
கண்ணகி வழக்குரை பத்தினி தெய்வமாக போற்றி அவள் கோபத்தை தணிவிப்பதாக குளிர்ச்சி காதையுடன் முடிவடைகிறது.
கண்ணகி வழக்குரை மீண்டும் புதிய பதிப்பு வெளிவரவேண்டும் .நிதி மிகுந்தவர் முன் வந்தால் செய்யலாம்.
No comments:
Post a Comment