Friday, 12 August 2016

தமிழ் "கற்றதனால் ஆய பயன்"




தமிழ் "கற்றதனால் ஆய பயன்"

"தந்தை மகர்க்காற்றும்  உதவி
அவையத்து  முந்தியிருப்ப செயல்"

வறுமையிலும் செம்மையாக என்னை படிப்பில் ஊக்கப் படுத்திய அப்புச்சி.
குப்பி விளக்கில் விழித்திருந்து பாடம் சொல்லி தந்த அம்மா

1981ல் நான் யாழ்ப்பாண பல்கலைக் கழக தமிழ் சிறப்பு கற்கை மாணவனாக இருக்கும் போது ,மதுரையில் நடை பெற்ற ஐந்தாவது உலகத் தமிழாராச்சி மகாநாட்டில் பேராசிரியர் கைலாசபதியுடன் பங்கு பற்றியதிலிருந்து ஆரம்பமானது என் கல்வி சார் வெளி நாட்டு பயணங்கள்.இன்று வரை தொடர்கிறது.
எத்தனை பயணங்கள் எவ்வளவு கல்வியாளர்களின் சந்திப்பு.ஆராய்ச்சியும் அனுபவமுமாய் கருத்தரங்குகள்,மகாநாடுகள்,பயிலரங்குகள் .
1981ல் இந்தியாவின் பிரதமர் இந்திராகாந்தியை சந்திக்க கிடைத்த வாய்ப்பு சில நிமிடங்கள் அவர் என்னுடன் உரையாடியமை .
கிழக்கு பல்கலைக் கழக விரிவுரையாளரான பின் தமிழ் நாட்டு பல்கலைக் கழகங்களில் நடை பெற்ற பல பயிலரங்குகளிலும் கருத்தரங்குகளிலும் பங்கு கொண்டமை.
பாண்டிச்சேரி பல்கலைக் கழகத்தில் பட்ட மேற்படிப்பு கற்கைகள் மேற்கொள்ளும் போது பஞ்சாப்,கல்கத்தா,கேரளா,கர்நாடகா,ஆந்திரா என நீண்ட கலை பயணங்கள்.தன்னானே கலைக் குழுவினருடன் கே.ஏ.ஜியோடு தமிழ் நாடெங்கும் பயணித்த நாட்கள்.

கிழக்குப் பல்கலைக் கழக கலைப் பீடாதிபதியாக இருக்கும் போது  தமிழ் நாட்டு பல்கலைக் கழகங்களினூடான தொடர்பு.இத்தாலிப் பயணம்.ஆர்ஜண்டினா செல்ல வாய்ப்பு கிடைத்தும் செல்ல முடியாமல் போனமை.அதேபோல அமரிக்க பல்கலைக் கழகங்களை தரிசிக்க ஒருமாத சுற்றுப் பயணம் நான் கடத்தப் பட்டமையால் முடியாமல் போனமை.

புலம் பெயர்ந்த பின் ஐரோப்பிய நாடுகளிலிருந்து வந்த பல அழைப்புகள் விருந்தினராக இன்னிய பயிற்றுவிப்பாளராக,பயிலரங்க செயல் பாட்டாளராக ,பேச்சாளராக என எத்தனை முகங்கள்.
நோர்வே பத்து தடவைகளுக்கு மேல்
பிரான்ஸ் பதினொரு தடவைகள்
ஜேர்மன் இரண்டு முறை
சுவிஸ் மூன்று முறை
டென்மார்க் இரண்டு முறை
சுவீடனிலிருந்து அழைப்பு வந்தது போக முடியவில்லை
அவுஸ்ரேலிய அழைப்புக்கும் செல்லவியலவில்லை.
கனடாவுக்கு பல முறை அழைப்பு வந்தும் செல்ல முடியவில்லை.
2015ல் மலேசியாவில் நடைபெற்ற 9வது உலகத்தமிழாரச்சி மகாநாட்டில் பங்கேற்பு.

"கற்றதனால் ஆய பயன்" என்றும் பெருமையுடைத்து .
பணத்தினாலான பயன் சிறுமையுடைத்து.

No comments:

Post a Comment