Sunday, 14 August 2016

உலகத் தாய்மொழி நாள்

உலகத் தாய்மொழி நாள்
நமது மொழி தமிழ் ஆனாலும் அது இடத்துக்கு இடம் கிரமத்துக்கு கிராமம் தனித்துவமான பண்புகளை கொண்டுள்ளது.
தமிழ் நாட்டில் ஈழத் தமிழ் என்றதும் அடையாளப் படுத்தப் படுவது ,யாழ்ப்பாணத் தமிழே.
மட்டக் களப்பு தமிழ் அதன் புழங்கு நிலை , மக்கள் வாழ்வியல் சார்ந்து மாறுபாடடைகிறது.
திருகோணமலைத் தமிழ் அதிலும் குறிப்பாக மூதூர் கிராமங்கள் ஒவ்வொன்றும் தமக்கான பேச்சு முறைகளை கொண்டுள்ளன.சேனையூர் சம்பூர் பள்ளிக்குடியிருப்பு மல்லிகைத்தீவு கிளிவெட்டி என அடையாளம் காண முடியும்.
மூதூர் நகரத்து கிறிஸ்த்தவர்கள் வழக்கு வித்தியாசப்படும்.
மூதூர் முஸ்லிம்கள் பேச்சு வழக்கும் ஏனைய முஸ்லிகளின் பேச்சிலிருந்து வேறு பட்டதே.
கொட்டியாரப் பிரதேசத்தின் கவனிக்கப் படத்தக்க பிரிவினராக விழங்கும் பூர்வ குடிகளான வேடுவர்களுடைய தமிழ் சில தனித்துவமான சொல்லாட்சிகளுடன் பயன்பாட்டில் உள்ளது. தாய் மொழி என்பது வித்தியாசங்களினூடு பொதுமைப் படுகிறது.

No comments:

Post a Comment