Friday, 12 August 2016

தமிழில் பிறந்த நாள்

தமிழில் பிறந்த நாள்

தமிழர் மரபில் பிறந்த நாள் கொண்டாடுவதில்லையா? நம் மரபில் அது இல்லையா என கேள்விகள் எழுகின்றன.எனக்கு பிறந்த நாள் பற்றிய முதல் பதிவு இலங்கை வானொலியின் பிறந்த நாள் வாழ்த்து நிகழ்ச்சி மூலமே ஏற்படுகிறது.என் காலத்து குழந்தை பருவ நாட்களில் எங்கள் வீட்டில் ஊரில்  பிறந்த நாள் கொண்டாடிய ஞாபகம் இல்லை.ஆனாலும் பிறந்த நாளில் கோயிலில் பூசைக்கு கொடுத்து அர்ச்சனை செய்யும் மரபு இருந்து வந்துள்ளது.நான் அறிய 70களுக்கு பின்பே எங்கள் ஊரில் பிறந்த நாள் கொணாடும் நிகழ்ச்சிகள் நடை பெற தொடங்குகின்றன.

நான் திருமணம் முடித்த பின் தான் இந்த பிறந்த நாள் பற்றிய கருத்துரு கொஞ்சம் பழக்கத்திற்கு வருகிறது இப்போதும் எனக்கு என் தம்பி மாரின் பிறந்த நாட்கள் என் நினைவில் இல்லை ஏனெனில் அந்த consapt நம் பண்பாட்டில் தொடர்ச்சியான வழக்காக இல்லையோ என்ற கேள்வி நமக்குள் எழுவது நியாயம் தானே.
சங்க இலக்கியமான மதுரைக் காஞ்சி கன்ணன் பிறந்த நாளை இப்படி குறிப்பிடுகிறது.

"கணம்கொள் அவுணர்க் கடந்த பொலந்தார்
மாயோன் மேய ஓண நல்நாள்"
இங்கு ஓண நன்னாள் என்பது பிறந்த நாளைக் குறிப்பதாக உரையாசிரியர்கள் சொல்வர்.
பண்டைய தமிழ் மன்னர்கள் தங்கள் பிறந்த நாட்களில் நிவந்தம் அளித்தததற்கான பல கல்வெட்டு சான்றுகள் நிருபிக்கின்றன.

"இராசராசன் சித்திரைத் திங்கள் சதய நட்சத்திரத்தில் பிறந்தவர் என மன்னரதுதிருப்புகலூர் கல்வெட்டும் முதலாம் இராசேந்திர சோழரின் எண்ணாயிரம் கல்வெட்டும் செப்புவதாக முனைவர் சூ. சுவாமிநாதன் (கல்வெட்டாய்வாளர் இந்தியத் தொல்லியல் அளவீட்டுத்துறை மைசூர்) கல்லெழுத்தில் காலச்சுவடுகள் (பக்கம் 38, 39) என்ற நூலில் குறிப்பிடுகிறார்."

இன்று நம்மவர் மத்தியில் உள்ள பிறந்த நாள் கொண்டாட்ட மரபு மேலைத்தேய செல்வாக்கால் ஏற்பட்டது.மேலைத்தேயத்தவர்கள் செய்யாத அளவுக்கு நம்மவர்கள் பிறந்த நாள் விழாக்களை ஆடம்பரப் படுத்தியுள்ளார்கள்.

மேலைத்தேய மரபு ஒளியயை அணைத்து பிறந்த நாள் கொண்டாடுவது நம் மரபு ஒளியேற்றி கொண்டாடுவது.தமிழ் மரபினடிப்படையில்  பிறந்த நாள் விழாக்களை கொண்டாடாட முயற்சிக்கலாம்.

ஆசிர்வாதம் மிக்க வீட்டு பெரியவர்களைக் கொண்டு விழக்கேற்றி நம் பலகார வகைகளுடன் கொண்டாடலாம்.

No comments:

Post a Comment