சிவாஜி எனும் மா கலைஞன்
அவர் நினைவுகளால் நிரம்பி வழியும் நாள் இன்று.
உலகின் உன்னதமான நடிகர்கள் பலர் வாழ்ந்து மறைந்திருக்கின்றனர் ,அவர்கள் எவருக்கும் இல்லா சிறப்பு சிவாஜிகணேசனுக்கு மட்டும்தான் உண்டு.
பல சிறப்புக்களை வரிசைப் படுத்திக் கொண்டே போகலாம்.
அவர் காலத்தில் மேற்குலகில் புகழ் பெற்ற நடிகர்களாக விளங்கியவர்கள் மார்லன் பிரண்டோ,யூல் பிரைனர்,சால்ஸ்ஹெஸ்ரன்,அன்ரனி குயின் போன்றோர்
இவர் போலவே நாடகத்திலிருந்து சினிமாவுக்கு வந்தவர்கள்.இவர்கள் எல்லோரும் தங்கள் திரைப்படங்களில் தங்கள் தனித் திறமையயை வெளிப்படுத்தியவர்கள்.அவர்கள் காலத்தில் மேற்கத்தய சினிமாவின் நடிப்பின் வகை மாதிரிகளை நாம் இவர்களில் காணலாம் .ஆனால் மேலைத்தேய நடிப்பு முறமைகளின் எல்லாக் கூறுகளையும் வெளிப்படுத்திய ஒரு மா கலைஞனாக சிவாஜிகணேசனை நாம் முன்னிலை படுத்த முடியும் அதற்கான ஆதரங்களை அவர் படங்களிலிருந்து நாம் உதாரணமாக காட்ட முடியும்

சேக்ஸ்பியரின் புகழ் பெற்ற கதா பாத்திரங்களான யூலிய சீசர்,ஹம்லெட்,ஒதல்லோ ஆகியவற்றில் தோன்றிய பலமேலைத் தேய நடிகர்களின் பாத்திர சித்தரிப்பிலிருந்து இவர் மாறுபட்டுவெளிப்படுத்தியிருப்பார்.
ஒதல்லோவாக அன்பு படத்திலும் இரத்த திலகம் படத்திலும் இரண்டு விதமான ஒதல்லோவை நாம் பார்க்கலாம்.இரண்டும் ஒரே நடிகரா என வியக்க வைக்கும் நடிப்பு.
சொர்க்கம் திரைப் படத்தில் ஜூலிய சீசராக சீசர் என்ற பாத்திரத்தின்புதிய பரிமாணமாக வெளிப்பட்டிருக்கும் அவர் நடிப்பு ரொமான்டிச நடிப்பு முறைமையின் தென்னாசிய மாதிரியாக சில நிமிடங்களில் சீசரை நம் கண் முன் கொண்டு வந்திருப்பார்.
ராஜபார்ட் ரங்கதுரையில் ஹம்லெட்டாக அவர் காட்டுகின்ற உடல் மொழி சேக்ஸ்பியரின் நடிப்பு முறைமை இப்படித்தான் இருந்திருக்குமோ என நம்மை வியப்பில் ஆழ்த்தும்.
''சாணாக்கிய சந்திர குப்தா'' தெலுங்கு திரைப் படத்தில் மாவீரன் அல்க்சாண்டராக நடித்து அலக்சான்டரின் கம்பீரத்தை நம்முன் கொண்டு வரும் அழகே தனிஅத் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த என் டி ராம்மராவ்பேசப் பட்டதை விட இவர் நடித்த காட்சிகளையே விமர்சகர்கள் சிலாகித்து புகழ் ஆரம் சூட்டினர்.
ராஜா ராணி திரைப்படத்தில் சோக்கிரட்டிசாக தோன்றுவார் கலைஞரின் வசனத்தில் அந்த கதாபத்திரத்தின் உயிரோட்டமான வெளிப்பாடும் உணர்ச்சிகரமான உணர்வு வெளியும் நம்மை கிரேக்க காலத்துக்க்கே அழைத்து செல்லும்.
அவர் நினைவுகளால் நிரம்பி வழியும் நாள் இன்று.
பல சிறப்புக்களை வரிசைப் படுத்திக் கொண்டே போகலாம்.
அவர் காலத்தில் மேற்குலகில் புகழ் பெற்ற நடிகர்களாக விளங்கியவர்கள் மார்லன் பிரண்டோ,யூல் பிரைனர்,சால்ஸ்ஹெஸ்ரன்,அன்ரனி குயின் போன்றோர்
இவர் போலவே நாடகத்திலிருந்து சினிமாவுக்கு வந்தவர்கள்.இவர்கள் எல்லோரும் தங்கள் திரைப்படங்களில் தங்கள் தனித் திறமையயை வெளிப்படுத்தியவர்கள்.அவர்கள் காலத்தில் மேற்கத்தய சினிமாவின் நடிப்பின் வகை மாதிரிகளை நாம் இவர்களில் காணலாம் .ஆனால் மேலைத்தேய நடிப்பு முறமைகளின் எல்லாக் கூறுகளையும் வெளிப்படுத்திய ஒரு மா கலைஞனாக சிவாஜிகணேசனை நாம் முன்னிலை படுத்த முடியும் அதற்கான ஆதரங்களை அவர் படங்களிலிருந்து நாம் உதாரணமாக காட்ட முடியும்
சேக்ஸ்பியரின் புகழ் பெற்ற கதா பாத்திரங்களான யூலிய சீசர்,ஹம்லெட்,ஒதல்லோ ஆகியவற்றில் தோன்றிய பலமேலைத் தேய நடிகர்களின் பாத்திர சித்தரிப்பிலிருந்து இவர் மாறுபட்டுவெளிப்படுத்தியிருப்பார்.
ஒதல்லோவாக அன்பு படத்திலும் இரத்த திலகம் படத்திலும் இரண்டு விதமான ஒதல்லோவை நாம் பார்க்கலாம்.இரண்டும் ஒரே நடிகரா என வியக்க வைக்கும் நடிப்பு.
ராஜபார்ட் ரங்கதுரையில் ஹம்லெட்டாக அவர் காட்டுகின்ற உடல் மொழி சேக்ஸ்பியரின் நடிப்பு முறைமை இப்படித்தான் இருந்திருக்குமோ என நம்மை வியப்பில் ஆழ்த்தும்.
ராஜா ராணி திரைப்படத்தில் சோக்கிரட்டிசாக தோன்றுவார் கலைஞரின் வசனத்தில் அந்த கதாபத்திரத்தின் உயிரோட்டமான வெளிப்பாடும் உணர்ச்சிகரமான உணர்வு வெளியும் நம்மை கிரேக்க காலத்துக்க்கே அழைத்து செல்லும்.
No comments:
Post a Comment