Friday, 12 August 2016

ஈழத் தமிழ் இலக்கியத்தின் உன்னதங்கள்.1


ஈழத் தமிழ் இலக்கியத்தின் உன்னதங்கள்.1

ஈழத்தமிழ் இலக்கியம் அதன் தோற்றுவாய் எங்கிருந்து தொடங்குவது கேள்விகளால் நிறைந்திருக்கிறோம்.சங்க இலக்கிய ஈழத்துபூதந்தேவனாரிலிருந்து தொடங்குவர் ஆராய்ச்சியாளர்கள்.

சங்க இலக்கியத்தின் பின் மிக நீண்ட இடைவெளி.12ம் 13ம் நூற்றாண்டு வரை இருண்டு கிடக்கிறது.இந்த இடைவெளியயை எப்படி நிரப்ப முடியும்.

அறுந்து போன கண்ணிகளை தேடி ஈழத்து பல்கலைக்கழகங்களின் தமிழ்துறையினர் ஆராய்ச்சிகளை செய்ய வேண்டும்.மீண்டும் மீண்டும் அரைத்த மாவையே அரைக்காமல்.

பொலனறுவை காலத்தில் பல தமிழ் ஏடுகள் எரியூட்டப் பட்டதாக சில தகவல்கள் கூறுகின்றன.அந்த எரியூட்டலில் எல்லா தமிழ் நூல்களும் எரிந்து போயினவா.நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் அந்த நூல்களின் பெயர்களாவது கிடைக்குமா என நம் ஆய்வாளர்கள் சிந்திக்க வேண்டும்.

ஆனாலும் நம் மக்களிடம் தொன்று தொட்டு வாய் மொழி மரபாக பேணப்படும் இலக்கிய மரபு இதற்கான விடைகளை தருகிறது.
இங்குதான் கண்ணகி தொடர்பான இலக்கியங்கள் முக்கியப் படுகின்றன.சிலப்பதிகார மரபோடு நாம் இவற்றை தொடர்பு படுத்தி பார்க்க வேண்டும்.

அன்னிய ஆட்சிக் காலத்திலும் பல பழைய ஏடுகள் குறிப்பாக போத்துகீச,ஒல்லாந்த,ஆங்கிலேய காலத்தில் அவை அழிக்கப் படுள்ளன.

ஈழதவர் மத்தியில் எழுந்த அம்மானை மரபும் ,சிந்து மரபும்,புராண மரபும் ஈழத்தமிழிலக்கியத்தின் தொன்மை மரபை நமக்கு தொடர்புறுத்துகின்றன.

தமிழ் நாட்டில் உள்ள பல எழுத்தாளர்களுக்கும் அரசியல் வாதிகளுக்கும் நம் தொன்மை மரபு சரியாக தெரியாது என்றே சொல்ல வேண்டும்.
இந்திய தமிழர்களுக்கு சமதையான தொன்மை மரபு ஈழத் தமிழர்களுக்கு உண்டு.

No comments:

Post a Comment