இன்று என் வாழ்வில் மிக கடினமான நாள்..
.
20வருடங்கள்
உண்டு படுத்து
ஒட்டி உறவாடி
கனவுகளை சுமந்து
சந்தோசத்தை பகிர்ந்து
துக்கத்தை கொண்டாடி ...
மகளின் நினைவுகள்
அவள் காலடிகள்
சுவாசத்தின் சுகமானா வாசனை
எல்லாம் ...கேள்விகளாய் என் முன்
கோபம் சோகம் வெறுப்பு
எல்லாம் ஒன்றாய் என்னுள்
நினைவின் சுமை இதுதானோ?
இனி எப்போது எனக்கு வாய்க்கும்
எல்லாம் அன்னியம் தானோ
என
அலுத்து கொள்கிறது மனம்
எதுவுமே இன்று பிடிபடவில்லை
வழுக்கி வழுக்கி போகிறது
பற்றிக் கொள்ள எதுவுமில்லை
என்னிடம்
வாழ்தல் என்பது நமக்கானதா
அல்லது
மற்றவர்களுகானதா
எது யதார்த்தம்
என் மகள் கேட்ட கேள்விகள்
ஏன் வாழ்கிறோம்
எதற்கு வாழ்கிறோம்
எல்லாம் பெரும்
பூதமாய் என் முன்
ஓரிடத்த்தில் பிறந்தோம்
இன்னோரிடத்தில் வாழ்ந்தோம்
இப்போ
பிறிதோர் இடத்தில் வாழ்கிறோம்
இனி எவ்விடமோ
எல்லாம் ஏன்
என் மகள் நினைவாய்
எஞ்சியிருப்பவை எவை
எல்லாம் என்னுள்
ஒரு பெரும்
பனி மலையாய்
வாழ்வின் சந்தோச பொழுதுகள்
என் மகளில்
அவளோடு கழித்த
இரவு பகல்
அதிகாலை எல்லாம்
எங்கு
கரைந்து போனதோ
அந்த நிலத்தோடு
இல்லை
எல்லாமே ஒரு கவிதையாய்
காவியமாய்
பல கோடி ஜென்மங்கள் கடந்தும்
என்னுள்
.
20வருடங்கள்
உண்டு படுத்து
ஒட்டி உறவாடி
கனவுகளை சுமந்து
சந்தோசத்தை பகிர்ந்து
துக்கத்தை கொண்டாடி ...
மகளின் நினைவுகள்
அவள் காலடிகள்
சுவாசத்தின் சுகமானா வாசனை
எல்லாம் ...கேள்விகளாய் என் முன்
கோபம் சோகம் வெறுப்பு
எல்லாம் ஒன்றாய் என்னுள்
நினைவின் சுமை இதுதானோ?
இனி எப்போது எனக்கு வாய்க்கும்
எல்லாம் அன்னியம் தானோ
என
அலுத்து கொள்கிறது மனம்
எதுவுமே இன்று பிடிபடவில்லை
வழுக்கி வழுக்கி போகிறது
பற்றிக் கொள்ள எதுவுமில்லை
என்னிடம்
வாழ்தல் என்பது நமக்கானதா
அல்லது
மற்றவர்களுகானதா
எது யதார்த்தம்
என் மகள் கேட்ட கேள்விகள்
ஏன் வாழ்கிறோம்
எதற்கு வாழ்கிறோம்
எல்லாம் பெரும்
பூதமாய் என் முன்
ஓரிடத்த்தில் பிறந்தோம்
இன்னோரிடத்தில் வாழ்ந்தோம்
இப்போ
பிறிதோர் இடத்தில் வாழ்கிறோம்
இனி எவ்விடமோ
எல்லாம் ஏன்
என் மகள் நினைவாய்
எஞ்சியிருப்பவை எவை
எல்லாம் என்னுள்
ஒரு பெரும்
பனி மலையாய்
வாழ்வின் சந்தோச பொழுதுகள்
என் மகளில்
அவளோடு கழித்த
இரவு பகல்
அதிகாலை எல்லாம்
எங்கு
கரைந்து போனதோ
அந்த நிலத்தோடு
இல்லை
எல்லாமே ஒரு கவிதையாய்
காவியமாய்
பல கோடி ஜென்மங்கள் கடந்தும்
என்னுள்
No comments:
Post a Comment