Thursday, 11 August 2016

காணி நிலம் வேண்டும்"

"
காணி நிலம் வேண்டும்"

கவி பாரதியின் பாடல் வரிகள் ஒவொருவர் வாழ்விலும் காணி நிலம் அதன் அநுபவங்கள் சார்ந்து  பல நினைவுகளை நம் வாழ் நாள் முழுவதும் சுமந்து வரும்.
நான் பிறந்த காணி நிலம் என் குழந்தைப் பருவ வாழ்வின் காலத்தின் சாட்சியாய் இன்றும் சேனையூரின் இயற்கை எழில் சார்ந்த பணிவு வளவு,சேனையூர் ஆற்றின் கரை கண்டல் மரங்கள் கவிந்திருக்கும் துறை .கூட்டமாய் தென்னை மரங்கள்  கமுக மரங்களின் நீட்டம்,வாழைச் சோலை,புன்னை மர நிழல்,புளிய மரத்தில் ஊஞ்சல் இலுப்பப் பூ வாசம் கிணற்றடி மாமரம்  அடுப்படி பக்கம் பூத்து குலுங்கும் செவ்வரத்தை அருகே மசுக்கொட்டி செடி,வாசலில்  எப்போதும் இனிய வாசத்துடன் பவள மல்லிகை இப்போது நினைத்தாலும் மணக்கும் வாசம் அது.

எங்கள் பணிவு வளவருகே கோயிலுக்கு சொந்தமான பணிவு.நிலம் பற்றி பேசுகிற போது அதனோடிணைந்து அந்த நிலம் சார்ந்து வாழ்ந்த மனிதர்களும் அவர்கள் நினைவுகளும் நம்மோடு சேர்ந்து பயணிக்கும்.

அம்மாவுக்குரிய காணி வெம்பு என்று அத்த நாட்களில் அழைக்கப் பட்ட இடம் வெம்புக் காணி என்றே எல்லோரும் அழைத்தனர் அதுவும் எங்கள் ஊரின் ஒரு பகுதிதான். வெம்பு என்றால் அங்கு பயிர் சரியா வராது என்ற ஒரு நம்பிக்கை இருந்தது  அம்மம்மா ஆட்கள் அங்கு குடியேறும் போது ஒரு சில குடிகளே இருந்தன  நான் சிறுவனாக இருந்த காலத்தில் அப் பகுதி வாகை மரக் காடாய் இருந்தது வாகை மரமும் வாகை மரங்களில் குடியிருக்கும் பொன் வண்டுகளும் எங்களுக்கு விளையாடும்  களங்களாயின.மழை காலம் வந்தால் முழங்கால் அளவுக்கு தண்ணி பிடிக்கும் சேற்று புழு பிடித்த நினைவுகள்,பின்னாளில் பலரும் வந்து குடியேற இப்போ மனிதர்கள் உழைப்பால் பயிர் செழிக்கும் பூமியாய் மாறியுள்ளது பக்கத்தில் நாகதம்பிரான் ஆலயம்  குருந்தும் பாலையும் சூழ் சோலை அது என் மாலைப் பொழுது ஆலமர நிழலில் மணல் பரப்பில் விளையாட்டும் படிப்புமாய் கழியும்.

நாம் எங்கு சென்றாலும் காணி நிலம் பற்றிய நினைவுகள் துரத்திக் கொண்டே இருக்கும்.எங்கள் குடும்ப வயல் காணி மயிலிமலைக் குள குளத்து சேனை வயல் குளம் வயல் காடு என மாறி மாறி அமைந்த சூழல் வயலில் விழையும் நெல்லை விட எனக்கு வயலோரம் கிடைக்கும் கானாந்தி,ஆரல்,பொன்னாங்காணி கீரை வகைகள் பிடிக்கும்.குகத்தில் குளித்தலும் வாய்க்காலில் நீந்துதலும் வான் கதவிலிருந்து பாய்தலுமாக எங்கள் வயல் காணியில் கழியும் நாட்கள்.காணி நிலம் நமக்கு தரும் சந்தோசங்கள்.

எங்கள் கிராமம் சேனைச் செய்கைக்கு பேர் போனது,சோழன் ,மரவள்ளி,கச்சான்,மற்றும் சிறு தானியங்ககள் நன்கு விளையும் நிலம். கூழாவடி ஆரப் பத்த எனும் இடத்தில் அப்புச்சி ஒரு சிறு குழத்தோடு இணைந்த பகுதியயை ஆறு ஏழு ஏக்கர் நிலம் எஙளுக்கு சொந்தமாக்கினார்.பயிர் விளையும் காலம் நான் இரவு நேரங்களில் காவலுக்கு தனியே காவல் காத்த நாட்கள் நிலத்தின் மீதான தொடர்பை மேலும் வலுப் படுத்தியது.

எங்களுக்கு இன்னொரு காணியிருந்தது கற்சுனையடியில் அதுவும் பண்டைக் காலத்தில் மக்கள் வாழ்விடமாயிருந்திருக்க வேண்டும்.கல் இடுக்கில் தண்ணீர் ஊறும் இடம் வருசம் முழுவதும் வற்றாத தண்ணீர் இருக்கும்.ஒரு ஆறு ஏழு ஏக்கர் காணி நாங்கள் அங்கு மிகப் பெரிய மரவள்ளி தோட்டம் வைத்திருந்தோம் எண்பதுகளின் முற்பகுதியில். அத்தோட்டம் செய்யும் காலத்தில் மரவள்ளிக் கிழங்கு ஒரு கிலோ 35 சதம்
மூன்று வருடங்களுக்கு முன் அந்த காணிகளை கையகப் படுத்திய அரசு அகதிகளுக்கான வீட்டு திட்டத்தை உருவாக்கியுள்கது.

கடந்த யுத்த காலத்தில் மக்கள் தங்கள் காணி நிலங்களை இழந்து பலர் இன்று தங்கள் காணி நிலத்தின் நினைவுகளோடு மட்டும் வாழ்கின்றனர்.

No comments:

Post a Comment