Saturday, 20 August 2016

நீயும்
நானும்

அப்பா
கதை
சொல்லு
என
ஆயிரம்
கதைகள்
கேட்பாய்
உற்ற கதை
சொல்லவா
பட்ட
கதை சொல்லவா
என
கேட்பேன்

பட்ட கதை சொல்லு
என்பாய்
இளமை நாட்களில்
அனுபவித்த
வறுமையயயும்
அதன் வலிகளையும்
சொல்வேன்
நான்
அழுவேன்
நீ
என் கைகளை
பிடித்து
கண்ணீர் துடைப்பாய்

உற்ற கதை கேட்டு
ஆர்ப்பரிபாய்
ஆனந்த களிப்பில்
இருவரும்

No comments:

Post a Comment