Thursday, 11 August 2016

எங்கள் காலத்து கவி
            ஞானக் கூத்தன்

எங்கள் காலத்து கனவுக்
கவிஞன் அவன்
மண்ணையும்  மக்களையும்
பாடிய மா கவிகளில் ஒருவன்

நவீன தமிழ் கவிதைகளில்
நமக்கு பல
முன்னுதாரணங்களை
தந்தவன்
என் ஆதர்சக் கவிகளில்
ஒருவன்

வானம்பாடியாய் வண்ணச் சிறகடித்து
மரபும் புதுமையுமாய்
நம்மை மயக்கிய
மாயக் கவி அவன்

அஞ்சலித்து வணங்குகிறேன்
உன் திசை பார்த்து

No comments:

Post a Comment