Saturday, 13 August 2016

ஈழத்தில் பரத நாட்டியம் ஏரம்பு சுப்பையா முதல் இன்று மோகனப் பிரியன். வரை


ஈழத்தில் பரத நாட்டியம்
ஏரம்பு சுப்பையா முதல் இன்று மோகனப் பிரியன். வரை
ஈழத் தமிழர் மரபில் நடன மரபு பற்றி திருக்கோவில் கல்வெட்டு சான்றுகள் மற்றும் பொலநறுவை காலத்தில் அரசவை நடன மங்கையர் பற்றிய செய்திகளும் யாழ்ப்பாணத்தில் எழுந்த "கனகி புராணமும்" தொடர்ந்து வந்த சதுராட்ட மரபு சின்ன மேளமாய் கோயில்களில் கொண்டாடப் பட்ட நாட்களும் இன்றய பரதத்தின் மூலங்களே
"பொலநறுவையில் உள்ள சிவன் ஆலயத்திலும், கந்தளாயில் இருந்து விஜயராஜ ஈஸ்வரத்திலும் தேவதாசியாட்டம் அல்லது சதுராட்டம் எனப்படும் நாட்டிய வகைகள் இறை பக்தர்கள் அல்லது தாசர்கள் எனப்படுவோரால் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன என்பதனை ஈழத்திற்கு வருகை தந்திருந்த மொறோக்கோ நாட்டுப் பயணியாகிய இபன்பட்டுட்டா 1244ல் குறிப்பிட்ட வரலாற்றுக்குறிப்பு, மற்றும் இங்கு பதியப்பட்டுள்ள கல்வெட்டுக்களாலும் அறியமுடிகின்றது. இபன்பட்டுட்டாவின் குறிப்பில் 500க்கு மேற்பட்ட தேவரடியார்கள் இருந்துள்ளனர் எனக்குறிப்பிட்டுள்ளார். சிங்கள இலக்கியங்களும் நடன, கலை நிகழ்ச்சிகள் பற்றிய குறிப்புக்கள் இந்து ஆலயங்களில் இடம்பெற்றுள்ளமையை குறிப்பிட்டுள்ளன."
யாழ்ப்பாண ஏரம்பு சுப்பையா அவர்கள் மூலமாகவே இலங்கையில் பரத நாட்டியம் கல்வி முக்கியம் பெறுகிறது அவரே இன்றய வளர்ச்சிக்கான முன்னோடி என குறிப்பிடலாம்.அரச பாடசாலைகளில் 1960களில் பரத நாட்டியம் ஒரு பாடமாக அங்கிகரிக்கப் படுகிறது இலங்கை அரசால் முதல் நியமனம் பெற்ற பரத நாட்டிய ஆசிரியர் இவரே
இன்று பல்கலைக்கழக பட்ட படிப்பு வரை இந்த மரபு நீட்சி பெற்றுள்ளது.
ஏரம்பு சுப்பையாவின் பின் பெரும்பாலும் பெண்களே பரத நாட்ட்டியத்தில் அதிகம் புலமை பெற்றனர்.ஒரு சில விதி விலக்குகள் உள்ளன மட்டக்களப்பில் திரு.கைலாயபிள்ளை யாழ்ப்பாணத்தில் கலைஞர் வேலானந்தன் ஆகியொர் இத்துறையில் குறிப்பிடத் தக்க பங்களிப்பு செய்தவர்கள்.
இன்று பல இளைஞர்கள் பரத நாட்டிய கலைஞர்களாக பரிமாணம் பெற்றுள்ளனர்.
மட்டக்களப்பை சேர்ந்த இளம் கலைஞன் மோகனப் பிரியன் கலைக்காவிரியில் பட்டம் பெற்று உலகம் அறிந்த பரதநாடியத்தின் புலமையாளனாக அடையாளம் காணப்படுகிறார்.தேடல் மிக்க கலைஞனாகவும் கற்பனை வளம் மிக்க ஒரு ஆற்றுகையாளனாகவும் அவனை நான் காண்கிறேன்.நம்பிக்கை தரும் ஒரு ஈழக் கலைஞன் அவன் .சிங்கப்பூரில் ஆசிய நடனக் குழுவில் இணைந்து பல நாடுகளுக்கும் பயணம் செய்து தன் திறமையயை வெளிப்படுத்தி வருகிறார்

No comments:

Post a Comment