ஈழத்தில் பரத நாட்டியம்
ஏரம்பு சுப்பையா முதல் இன்று மோகனப் பிரியன். வரை
ஈழத் தமிழர் மரபில் நடன மரபு பற்றி திருக்கோவில் கல்வெட்டு சான்றுகள் மற்றும் பொலநறுவை காலத்தில் அரசவை நடன மங்கையர் பற்றிய செய்திகளும் யாழ்ப்பாணத்தில் எழுந்த "கனகி புராணமும்" தொடர்ந்து வந்த சதுராட்ட மரபு சின்ன மேளமாய் கோயில்களில் கொண்டாடப் பட்ட நாட்களும் இன்றய பரதத்தின் மூலங்களே

யாழ்ப்பாண ஏரம்பு சுப்பையா அவர்கள் மூலமாகவே இலங்கையில் பரத நாட்டியம் கல்வி முக்கியம் பெறுகிறது அவரே இன்றய வளர்ச்சிக்கான முன்னோடி என குறிப்பிடலாம்.அரச பாடசாலைகளில் 1960களில் பரத நாட்டியம் ஒரு பாடமாக அங்கிகரிக்கப் படுகிறது இலங்கை அரசால் முதல் நியமனம் பெற்ற பரத நாட்டிய ஆசிரியர் இவரே
இன்று பல்கலைக்கழக பட்ட படிப்பு வரை இந்த மரபு நீட்சி பெற்றுள்ளது.
இன்று பல்கலைக்கழக பட்ட படிப்பு வரை இந்த மரபு நீட்சி பெற்றுள்ளது.

இன்று பல இளைஞர்கள் பரத நாட்டிய கலைஞர்களாக பரிமாணம் பெற்றுள்ளனர்.
மட்டக்களப்பை சேர்ந்த இளம் கலைஞன் மோகனப் பிரியன் கலைக்காவிரியில் பட்டம் பெற்று உலகம் அறிந்த பரதநாடியத்தின் புலமையாளனாக அடையாளம் காணப்படுகிறார்.தேடல் மிக்க கலைஞனாகவும் கற்பனை வளம் மிக்க ஒரு ஆற்றுகையாளனாகவும் அவனை நான் காண்கிறேன்.நம்பிக்கை தரும் ஒரு ஈழக் கலைஞன் அவன் .சிங்கப்பூரில் ஆசிய நடனக் குழுவில் இணைந்து பல நாடுகளுக்கும் பயணம் செய்து தன் திறமையயை வெளிப்படுத்தி வருகிறார்
No comments:
Post a Comment