இது பாலப் பழக் காலம்
எங்கள் சேனையூரில் சித்திரை மாதம் தொடங்கினால் கொண்டாடத்திற்கு குறைவிருக்காது.வயலும் வயல் சார்ந்து காடும் காடு சார்ந்து இயற்கையின் எல்லா சுவை களையும் அனுபவிக்கும் அனுபவம் பெற்றவர்கள் நாங்கள்.


கட்டு சோறு கட்டி சென்று ,சாப்பிடுவதும் விளையாடுவதுமாய் சந்தோசம் நீளும்.
இளக்கந்தை குளத்தை அண்டிபகுதி சில நாட்களில் திருவிழா காலம் போல காட்சியளிக்கும்.
இது தமிழ் நிலத்துக்கான பழம்.
பூர்வ குடிகளின் வருமானத்துக்கான வழியாகவும் அமைகிறது.இந்த பழத்தை காய வைக்கிற போது காய்ந்த திராட்சை போல இருக்கும்.
பாலப் பழத்திலிருந்து இனிய பாணி தயாரிக்கப்படும் நீண்டகாலம் பாது காபபாக வைத்து பாவிக்கலாம்.

பாலப் பழ பாணியும் தயிரும் சோறும் வாழப் பழமும் சேர்த்து சாப்பிடும் போது அதன் சுவையே தனிதான்.
ஈச்சலம் பத்தை,வெருகல்,கதிர வெளி,வாகரை பிரதேசங்கள் பாலப் பழத்துக்கு பேர் போனவை.
எங்கள் ஊரில் சொல்வார்கள் சித்திரை மாதம் சிதறும் பழம்,வைகாசி மாதம் வாரும் பழம் ஆனி மாதம் அழுகும் பழம்
No comments:
Post a Comment