முட்டையில் மயிர் புடுங்கல்
நாம் வாழ்வில் பல சந்தற்பங்களில் இந்த மாதிரியான மனிதர்களை சந்திக்கிறோம்.நம் மரபு வழி பாடல்களிலும் கதையாடல்களிலும் இதற்கான உதாரணங்கள் நிறையவே உள்ளன.
''ஏண்டி குட்டி என்னடி குட்டி என்னாடி செய்தா '' என்ற கேள்விக்கு
மனைவியின் பதிலாய் வரும் பாடல் வரிகள்.
''கோழி முட்டைக்கு மயிர் புடுங்கினன் சும்மாவா இருந்தன்''

இந்த சொல்லாடல் இரண்டு வகை அர்த்தம் கொண்டது .கோபத்தில் வெளிப்படும் எள்ளல் சுவை சார்ந்ததாய் அமைகிறது.
நம் இலக்கிய வாதிகள் ,வித்துவ செருக்காளர்கள்,புதிதாய் முளைத்த அறிவு ஜீவிகளாய் ,நினைத்து கொண்டிருப்பவர்கள்.முன்னுரை எழுதும் எல்லாம் அறிந்த மகா ஞானிகள் என மலிந்திருக்கும் முட்டையில மயிர் புடுங்கல்.
எவ்வளவுதான் நேர்மையாக நடந்தாலும்,சரியாக செய்தாலும் வேண்டுமென்று பிழை கண்டு பிடிப்பது ஒரு வகை மன நோய் என உளவியல் அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்.பரம்பரையோடும் தொடர்பு படுத்தி சொல்கின்றனர்.எல்லாவற்றிலும் சந்தேகம் கொள்ளலும் நம்பிக்கை வரட்சி எனவே நாம் பார்க்க வேண்டும்.
இன்னொன்று மற்றவர்களை எரிச்சலடைய செய்யும் விதத்தில் இல்லாத விடயங்களுக்கும் பிழை கண்டு பிடித்தல்.இத்தகய நடத்தைகள் நம்மவர்களிடம் அதிகமாக உண்டு.மற்றவர்கள் பாதிப்பை உணராத மனிதர்கள்.
No comments:
Post a Comment