Sunday, 14 August 2016

பன்முக ஆற்றல் கொண்ட அசாத்திய படைப்பாளி அருள் செல்வநாயகம்(1926-1973)

பன்முக ஆற்றல் கொண்ட அசாத்திய படைப்பாளி
அருள் செல்வநாயகம்(1926-1973)

ஈழத்தமிழ் இலக்கிய பரப்பில்  பன்முக ஆற்றல் மிகு எழுத்தாளனாய் சாதனை படைத்தவர் குருமண் வெளியூர் அருள் செல்வநாயகம் அவர்கள்.
விபுலாந்தர் பால் மிகுந்த ஈடு பாடு கொண்டு நிறுவன மைய்யப் பட்டு செய்ய வேண்டிய வேலையயை  தனியொருவனாக நின்று செய்து முடித்தவர்.விபுலானந்தர் படைப்புகளை தேடி தமிழகம் சென்று பெறற்கரிய தகவல்களுடன் அவர் படைப்புகளை தேடி கண்டடைந்து பதிப்பித்து,தமிழ் ஆராச்சி உலகுக்குக்கு  பெருமை சேர்த்தவர் அருள் செல்வநாயகம்.
1982ல் விபுலானந்தர் நூற்றாண்டு கொண்டாடப் பட்ட போதுதான் விபுலானந்தரைப் பற்றி பலர் பேசத்தொடங்கினர்.ஆனால் அதற்கு முப்பது ஆண்டுகளுக்கு முன்னரே விபுலானந்தரை அவர் சாதனைகளை தமிழ் கூறும் நல்லுலகுக்கு கொண்டு வந்து சேர்த்தவர் .பின் வந்தவர்கள் விபுலானந்தர் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்ள இவரது தொகுப்புகளே அடிப்படையாய் அமந்தன.ஒரு பல்ககலைக் கழகம் செய்ய வேண்டிய வேலையயை தன் தூரநோக்கு கொண்ட சிந்தனையாலும் விபுலானந்தர் மேல் கொண்ட அளவிடமுடியா பற்றலும் செய்து முடித்தவர் அருள் செல்வநாயகம் அவர்கள்.
விபுலானந்தர் பற்றிய இவர் வெளியீடுகள்
1)விபுலானந்த அடிகள்
2) விபுலானந்த அமுதம்
3)விபுலனந்த தேன்
4) விபுலானந்த வெள்ளம்
5) விபுலானந்த கவிதைகள்
6)விபுலானந்த  செல்வம்
7) விபுலானந்த ஆராய்வு
8) விபுலானந்த கவிமலர்
9)விபுலானந்த சொல்வளம்
10)விபுலானந்த இன்பம்
இவற்றில் பல இலங்கை கல்வித் திணைக்களத்தால் பாடப் புத்தகங்களாக  அங்கிகரித்துள்ளன..
இவற்றை விட இவரது வெளிவந்த நூல்கள்

சிறுகதைத் தொகுதிகள்

1)ஈழநாட்டு வரலாற்று கதைகள்
2)தாம்பூலராணி

நாவல்கள்

1)வாழமுடியாதவன்
2)பாசக்குரல்
3)சூரியகாந்தி
4)மர்மமாளிகை

ஆராய்ச்சிகள்

1)நறுமலர் மாலை
2)ஈழமும் தமிழரும்
3)சீர்பாதம்

கிராமிய இலக்கியம்

1)சதாராம்
2)பூசணியாள்
3)பாஞ்சாலி சுயம்வரம்

நாடகம்

1)உயிர் ஈந்த ஓவியம்

கூத்து

1)பணக்காரன்
2)ஏர்முனை வேலன்(இவை நவீன கூத்துக்கள் இவை கூத்து மீளுருவாக்க பிரதிகள்)

இவை வெளிவந்த நூல்கள் இவற்றை விட இவர் பத்திரிககள் சஞ்சிககள் வானொலி  என்பவற்றுக்கு எழுதிய கட்டுரைகளும் கதகளும் நாடகங்களும் பல நூறு.

நார்பத்தியேழு ஆண்டுகளே மண்ணில் வாழ்ந்த இப்பெருமகன்  தமிழ் இலக்கிய உலகின் சாதனை மன்னன் என்றே வர்ணிக்கலாம்.கிழக்கின் தவப் புதல்வர்களில் ஒருவராக கொண்டாடப் பட வேண்டியவர் ''இலக்கிய வித்தகர் ''அருள் செல்வநாயகம் அவர்கள்

No comments:

Post a Comment