மாதங்களில் இவள் மார்கழி உணர்வுகளால் நினைவெழுதி..................................................................... என் செல்ல மகளே உன் நினைவுகளில் ஒரு தசாப்தம்கடந்து போயிற்று.உலகம் எத்தனையோ மாற்றங்களை உள்வாங்கிக் கொண்டு உயரப் பறக்கிறது.ஆனால் என் எண்ணங்கள் சிந்தனைகள் உன் நினைவுகளாலேயே நிரம்பி வழிகிறது. நீ....புன்னகைத்தபடி இருக்கும் புகைப்படத்தை பல்லாயிரம் தடவை நான் பார்த்துப் .....பார்த்து......மீண்டும் ...மீண்டும் பல கோணங்களில் மீள்..பிரதியாக்கம் செய்கிறேன் ..என் உயிர் மூச்சாய்...உணர்வொளியாய்...என்னுள் ........எபோதும் ...புன்னகைத்தபடி...நீ..........அனாமிர்தன் உன் தம்பி இபோதெல்லாம் அடிக்கடி உன்னைப்பற்றி விசாரிக்கிறான்.அக்கா இருந்திருக்க வேண்டும் என்ற ஏக்கம் அவனுக்கு.நீ இருக்கும் பொழுது உனக்கொரு தம்பிக்காக ஏங்கினாய்.ஒன்றிருக ஒன்று அதுதான் இயற்கையோ?யதார்த்தமோ?தெரியாது.வாழ்க்கை வட்டம் அப்படித்தான் சுழல்கிறது.வாழ்க்கை பற்றி நீ எழுப்பிய கேள்விகள் இன்னமும் அப்படியே உள்ளன.எந்தப் புனிதர்களிடமிருந்தும் அதற்கான பதில் இல்லை.''வாழ்க்கை வாழ்க்கையென்றால் என்ன ஏன் பிறக்கிறொம் ஏன் இறக்கிறொம் எப்போது இறப்போம் கருவுக்குள் இருக்கும் குழந்தை ஏன் இறக்கிறது...........''இப்படி நீண்டு செல்கிறது உன் கேள்விகள். கனவுகளில் நீ வருகிறாய்...என்னோடு பேசுகிறாய்..இரவுகள் விடிகிற போது...நிஜம் உறைக்கிறது.நிஜமெது கனவெது என எனக்குள்ளாகவே கேள்விகளை கேட்டு புதைந்து போகிறேன்.கனவுக்கும்நிஜத்துக்குமான போராட்டம் தொடர்கிறது........எங்கோ ..இருந்து உன் குரலொலிப்பதாக உணர்கிறேன்.இந்த காற்றில் தானே...உன் ஒலியும் மூச்சும் இசையும் கலந்து உரசிக் கொண்டிருக்கிறது. வா......வா ....மீண்டும் வந்து விடு...நான் தொலைத்த சந்தோசங்களை திருப்பி தந்து விடு..இறந்தவர்கள் ஒரு தசாப்தத்தின் முடிவில் வருவார்கள் என இயற்கை எழுதியிருந்தால் அந்த நாள் எப்படியிருக்கும் என என் கற்பனைக் குதிரை தறி கெட்டுப் பாய்கிறது.மகளே ....வருவாயா....................மகளே என் ஏக்க மூச்சுக்களுக்கு விடை கிடையாது என எனக்கு தெரியும்... வாழ்வின் வாசல்கள் தோறும் உன் நினைவுகளால் நான் கரைந்து போகிறேன்கடைசியாய் என்னைப் பார்து கையசைத்து காரில் ஏறிய காட்சி அழியா விழியாய் ஊழித் துயரத்தை உரக்க சொல்கிறது ...நியும் நானும் கடலையும் கரையயும் எவ்வளவு ரசித்திருபோம் ...இப்போதெல்லாம் நான்கடலை ரசிப்பதில்லை... அலைகளை ஆதர்சிப்பதில்லை ....ஊர்களை அடித்து குடிக்கும் ஊழிப் பூதமாகவே பார்க்கிறேன். .......மாமாங்க திர்த்த கரைஉன் உயிர் குடித்து உடல் தொட்டு புனிதமான மாதம் மார்கழி......புனிதங்கள் உடைபட்ட மாதமும் இதுதான் .......அன்றய நாளில்ஆயிரமாயிரம் கேள்விகளோடு அலைந்தார்கள் மனிதர்கள்.விளக்கம் சொல்ல யாரும் இல்லை..எந்த வேதாந்தமும் விடை காண முடியா நாள் அது.திரும்பிய திசையெங்கும் செத்தழிந்த உடல்கள்.ஓடிய இடமெல்லாம் ஒப்பாரி ஓசை.மரணத்தின் வாசம் நகரம் முழுவதும் பரவிக் கிடந்த நாள் அது .மகளே.... .......உன் இனிய நினைவுகளை சுமந்து கொண்டு உலகம் முழுவதும் அலைகிறேன்
No comments:
Post a Comment