இலங்கை பல்கலைக் கழக கல்வி முறைமைகளில் மாற்றம் தேவை
இலங்கை பல்கலைக் கழக கல்வி முறை காலத்துக்கு காலம் புதிய சீர்திருத்தங்களை கண்டிருந்தாலும் இன்னமும் முழுமையான சீர்திருத்தம் மேற்கொள்ளப் படவில்லை.காலத்துக்கு காலம் உலக வங்கி மற்றும் உதவி கொடை நிறுவனங்களின் தேவைகளுக்கு ஏற்பவே திட்டமிடப் படுகின்றன.ஆண்டுக்கு ஒரு தடவையோ இரு தடவையோ உல்லாச விடுதிகளில் தங்கியிருந்து திட்டங்கள் தீட்டப் படுகின்றன ஆனால் அவை நடை முறையில் சாத்தியப் படுத்தப் படுவதில்லை . வெறும் ஏட்டுச் சுரைக்காய்.

மாவட்டங்கள் தோறும் பல்கல்லைக் கழகங்கள் உருவாக்கப் பட வேண்டும்.மாகாண அரசுகளுக்கு பல்கலைக் கழகங்களை உருவாக்கும் அதிகாரம் பகிரப் பட வேண்டும்.
அரசியல் தலையீடுகளும் அதிகார த்கலையீடுகளும் அற்ற சுயாதீனமாக பல்கலைக் கழகங்கள் இயங்குவதை உறுதிப் படுத்த வேண்டும்.
பல்கலைக் கழகங்கள் அணுக முடியாத தங்க கோபுரங்கள் அல்ல என்பதை உறுதிப் படுத்த வேண்டும்.
1)பல்கலைக் கழகங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப் பட வேண்டும்.ஒவ்வோரு பல்கலைக் கழகங்களின் கீழும் பல்கலைகழக கல்லூரிகள் உருவாக்கப் படவேண்டும்.க.பொ.த பரீட்சையில் சித்தியடையும் எல்லோருக்கும் பல்கலைக் கழக அனுமதி கொடுக்கப் பட வேண்டும்.
2)தாய் மொழியில் அனைத்து பாடங்களும். கற்பிக்கப் படவேண்டும்.அரை வேக்காட்டு ஆங்கில மொழி மூலக் கல்வி கைவிடப் பட்டு ஆக்கிலக் கல்வி திறன் அதிகரிக்கப் படவேண்டும்.ஆங்கிலக் கல்வி என்பது அறிவு( knologe) அல்ல அது திறன் (skill)
3)நிர்வாக கட்டமைப்பிலான மாற்றங்கள்
பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டு ,பல்கலைக் கழகங்களின் சுயாயாதிக்கமான செயல் பாடுகள் அதிகரிக்கப் படவேண்டும்.அத்தோடு துணை வேந்தர்களின் அதிகாரங்கள் குறைக்கப் பட்டு பீடாதிபதிகளின் சுய செயல் பாடு அதிகரிக்கப் பட வேண்டும்.
4)பாடத்திட்டங்களில் மாற்றம்
நம்முடைய பல்கலைக்கழகங்கள் பெருமளவில் ஆசிரியர்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளாயுள்ளன.நம் நாட்டுக்கு ஏற்ற பாடத் திட்டங்களை வடிவமைக்க வேண்டும் வெளி நாட்டு தேவைகளுக்காகவோ அரச சார்பற்ற நிறுவனகளின் அபிலாசைகளை நிறவேற்றும் நோக்கோடு பாடத்திட்டங்கள் அமையக் கூடாது.
பிராந்திய தேவைகளுக்கு முன்னுரிமை கொடுக்கப் பட வேண்டும்.
(தொடரும்)
No comments:
Post a Comment