Thursday, 11 August 2016

மகரம் சூடிய மண்

மகரம் சூடிய மண்

மயிலி மலைக் கோட்டையிலிருந்து தன் நாட்டை ரசித்துக் கொண்டிருந்தான் அசோதயன்.ஒரு புறம் கடலும் மறு புறம் வளைந்து நெளிந்து செல்லும் சேனையூர் ஆறும் ,அவன் கட்டுவித்த குளங்களும் அதனோடிணைந்த வயல்களும்.குன்றுகளும்.கடலை கடந்து கம்பீரமாக  காட்சியளிக்கும் திருகோணமலையும்  அவன் மனதில் உற்சாகத்தை அள்ளி சொரிந்தன .

தன் ஆட்சிப் பிரதேசம் முழுவதும் குளங்களால் நிறய வேண்டும் என்பது அவன் பேரவா மக்கள் பஞ்சமின்றி வாழ குளங்கள் அவசியம் என்பதை  அவன் உணர்திருந்தான்.தந்தை இறந்த பின் ஆட்சிப் பொறுப்பு அவன் கைக்கு வந்தது.

மிடுக்கான தோற்றம் எடுப்பான மீசை பார்த்தவர் வியக்கும் அழகு.ஆற்றல் மிக்கவன் எதிரிகளை துவம்சம் செய்து யுத்தங்களை வெற்றி கொண்டவன்.தன் ஆட்சிப் பிரதேசத்தின் அழகில் அதன் வனப்பில் மயங்கிப் போனான் ஒவொரு முறையும் புதிதாக பார்ப்பது போல ரசிப்பான் அலுக்காது அவனுக்கு.ஏதோ நினைத்தவனாக திரும்பினான் அவனது கம்பீரமான வெள்ளைக் குதிரை சிலிர்த்துக் கொண்டு நின்றது.

நேற்று வந்த செய்தி நினைவுக்கு வர வேகமாக அரண்மனைக்குள் சென்று மாறு வேடமிட்டு திரும்பினான் குதிரை கனைக்க பாய்ந்து குதிரை மேல் ஏறி காலினால் ஒரு உந்துதல் கொடுக்க விர்ரென வேகமெடுத்தது இளக்கந்தை துறைமுகம் நோக்கி பறந்தது அவன் குதிரை.

(நான் எழுதிக் கொண்டிருக்கும் நாவலின் தொடக்கம்)

No comments:

Post a Comment