கண்ணகி குளிர்த்தி
இனிவரும் வாரம் கிழக்குமாகாணம் மட்டக் களப்பு அம்பாறை மாவட்டங்களில் கண்ணகி விழாவுக்கானது.கண்ணகி கோயில்கள் கதவு திறக்கப் பட்டு சடங்குகள் நடை பெறும்
''வைகாசித் திங்கள் வருவேனெண்று வரிசைக்கிசைந்து விடை கொடுத்தார்'' என கண்ணகி குளிர்த்தி குறிப்பிடுவதை போல வைகாசி மாதம் வரும் பெளர்ணமியை அடுத்த திங்கள் கிழமை கண்ணகி இங்கு வருவதாக ஒரு ஐதீகம் நிலவுகிறது

மதுரையயை எரித்த கண்ணகி மட்டக் களப்பு வந்து குளிர்ந்ததாக பல செவி வழிக் கதைகள் சொல்கின்றன.ஒவ்வோரு இடத்திலும் வேறுபட்ட வடிவங்களை இக் கதைகள் பெறுகின்றன.

கண்ணகி மீதும் சிலப்பதிகாரம் மீதும் நான் பெரும் காதல் கொள்ள இதுவே காரணம் .
என் பெரியப்பா காளியப்பு விஜயசிங்கம் கண்ணகி குளிர்த்தி பாடும் அழகே தனி.அவர் குரல் இன்னமும் என் காதுகளில் ஒலிக்கிறது.அவர் ஒரு பெரும் புலவரும் கூட.

கண்ணகி கதை எழுபது பாடல்களில் சொல்லப் பட்டிருக்கும்
''ஒருமா பத்தினி வந்தாள்
உலகேழும் தளைத்திட -வந்தாள் வந்தாள்
திருமா மணி நங்கை வந்தாள்
தேசம் தழைத்திட -வந்தாள் வந்தாள்''
என தொடரும் பாடல் வரிகள்
வேறுபட்ட இசைக்கோலங்கள் கண்ணகி குளிர்த்தியில் வெளிப்படும் .
ஈழத்தமிழர்களின் தனித்துவமான இசை மரபின் அடிப்படைகளை நாம் இங்கு காணலாம்.
கண்ணகி குளிர்த்தியயை நடன நாடக அளிக்கையாக செய்வது என் விருப்பம் இதுவரை அது கை கூடவில்லை.
No comments:
Post a Comment