பாலசுகுமார். படைப்புலகம்
என் படைப்புகள் எங்கள் மண்ணிலிருந்த்து வேர் கொண்டவை.
Friday, 26 May 2023
வானத்திலிருந்து வந்தவர்கள்
வானத்திலிருந்து வந்தவர்கள்
ஏறி வந்த ஏணியை மறந்து
எகிறிக் குதிக்கும்
அதி மேதா விலாசம் காட்டும்
அறிவு ஜீவிதப் புனைவு
திண்ணையை மறந்து
விண்ணாணம் பேசும்
எல்லாம் தெரிந்தவர்கள் போன்ற
கதையாடல்கள்
கதைத்து கதைத்தே
காதைத் திருகி எறியும்
திருகு தாளக் கோமாளிகளின்
கால(னிய)நீக்க கருத்து திணிப்பு
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment