பேரரறிஞர் ,பேராசிரியர் க.கைலாசபதி
90 ஆவது பிறந்த நாள்
இன்று 05.04.2023 பேராசிரியர் கைலாசபதியின் தொண்ணூறாவது பிறந்த நாள் .
தமிழ் கலை இலக்கிய உலகில் புதிய விமர்சன மரபின் தொடக்கமாய் ,முன் எப்போதும் இல்லாத வகையிலான அறிவு பூர்வமான பார்வையயை கலை இலக்கியங்கள் மீது காத்திரமான திறனாய்வு தளத்தில் சமரசமில்லாத முற்போக்கு பேராளுமை எங்கள் கைலாசபதி எனும் பேராசான்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உருவாக்கம் அதன் வளர்ச்சியில் பெரும் பங்காற்றியவர் 1974 ஆம் ஆண்டு முதல் வளாகத் தலைவராக பொறுப்பேற்று 1977 வரை கடமையாற்றி பல்கலைகழகம் எதிர்காலத்தில் எப்படி இருக்க வேண்டும் என திட்டமிட்டு அதற்கான வேலைத் திட்டங்களுக்கு அடித்தளம் இட்டு அதன் வழியில் செயல்பட்டவர்.
1977 முதல் 1982 இறக்கும் வரை யாழ் பல்கலைக்கழக தமிழ்த் துறை தலைவராக ,கலைப் புல முதல்வராக பணியாற்றி தமிழ் சமூகத்தின் அறிவுப் புல வழிகாட்டியாய் வாழ்ந்து மறைந்த எங்கள் பேராசான்.
அவர் வாழ்ந்தது என்னவோ வெறும் நாற்பத்தி ஒன்பது ஆண்டுகள் ஆனால் இன்னும் நாற்பத்தி ஒன்பதாயிரம் வருடங்கள் கடந்தாலும் ,அழியாத பெரும் தடத்தை உருவாக்கிச் சென்றுள்ளார்.
சங்க இலக்கியங்கள் முதல் நாவல்,சிறுகதை,நாடகம் ,கூத்து என எல்லா வகையிலான செல் நெறிகளிலும் புதிய ஒளி பாச்சியவர் எங்கள் பேரறிஞர் கைலாசபதி அவர்கள்.
பத்திரிகைத் துறை ,அரசியல் என சமூக இயங்கியலில் முற்போக்கு முகமாய் செயல்பட்டு பல நூறு தோழமைகளை வழிப்படுத்தி சென்றவர் எங்கள் பேராளுமை பேராசிரியர் கைலாசபதி அவர்கள்.
கைலாசபதி சிந்தனைப் பள்ளி அவர் எழுத்துக்களின் வழி உருவாகியுள்ளது.உலகப் பேரறிஞர்களில் ஒருவராக நாம் அவரைக் கொண்டாட வேண்டும்