வீரமுனையும் குருமண்வெளியும்
சோழ நாட்டில் இருந்து சீர்பாத தேவிக்கு துணையாக வந்தவர்கள் இறைவனது அருளால் வீரமுனை வந்து சீர்பாத குலமாகி வீரமுனையில் வாழ்ந்தமை யாவரும் அறிந்ததே. வீரமுனையில் வாழ்ந்த சீர்பாத குலத்தினர் காலத்தின் ஓட்டத்தினால் பெருகி வந்தனர். மக்களது பெருக்கத்துக்கு ஏற்ப உழுது வாழும் தொழில் வளம் வீரமுனையில் பெருகவில்லை. ஆதலினால் வீரமுனையில் வாழ்ந்தவர்களது கவனம். உழுது பயிரிடுவதற்கு ஏற்ற புதிய இடங்களை நாடுவதில் சென்றது. அதன் பயனாக மட்டக்களப்பு வாவியை அண்டிய பல இடங்கள் அவர்களது கவனத்தை கவர்ந்திழுத்தன.
முதலில் நீலன் அணைப்பகுதி அவர்களது நோக்கிற்கு உகந்த இடமாக தோன்றியது. ஆகவே நீலன் அணைப்பகுதிக்குச் சென்று உழுதொழில் செய்வதற்குரிய ஆயத்தங்களை ஏற்படுத்தினர். காடுகளை அளித்தும், காணிகளை செப்பனிடுவதும் பயிர்களை பாதுகாப்பதும் முதலில் சிரமமாகவே இருந்தது. ஆதலினால் நீலன் அணைப்பகுதியில் நிரந்தரமாய் குடியேறிவாழலாயினர். வளம் ததும்பிய மேற்குப்பகுதியும் அவர்களது கவனத்தை ஈர்த்தமையினால் துறையமைத்து போக்குவரத்து செய்தார்கள். அதன் பயனாக நீலன் அணையெனும் பெயர் துறைநீலன் அணையென வழங்குவதாயிற்று. காலவரையில் துறைநீலாவணையென அழைக்கப்படலாயிற்று. குடியேறிய மக்கள் சூழவுள்ள பள்ள நிலங்களை விவசாய நிலங்களாக செப்பனிட்டார்கள். மேற்குக் கரையிலுள்ள மேட்டு; வயல் வெளிகளில் மந்தை வளர்த்தார்கள். மேட்டு நிலங்களில் இல்லங்கள் அமைத்து வாழத் தொடங்கினர்.
மேலும் இக்கிராமம் மண்டூர் கோயில் தோற்றத்தோடு தொடர்புடையது. அதாவது சீர்பாததேவி வழிபட்டு வந்த வேலினை சிந்தன் அங்கு சீர்பாதகுலத்தவரிடையயே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் எடுத்துச் சென்று தி;ல்லை மரத்தின் மீது பதித்துவைத்தான். அவ்வேலே மண்டூர் கந்த சுவாமிகோயிலில் வழிபாட்டுக்குரிய வேலாக விளங்குகின்றது. அவ்வேலினைக் கொண்டுவந்த சிந்தன் துறைநீலாவணையிலேயே வாழ்ந்தான் இதனால் இங்கு சிந்தாத்திரன் குடியானவர்கள் அதிகளவாக வாழ்கின்றனர்.
சிந்தாத்திரன், பழச்சிகுடி, காலதேவன்குடி, படையாண்ட குடி, கங்கேயன்குடி, பரதேசிகுடி, வெள்ளாகிகுடி, நரையாகி குடி, ஞானி குடி, பாட்டுவாழி குடி, முடவன் குடி என 11 குடிகளை துறைநீலாவணைச் செப்போடு கூறுகின்றது. துiநீலாவணைக் கிராமத்திலே சிந்தாத்திரன், பாட்டுவாழி, முடவன் குடியினரே அதிக முக்கியத்துவத்தினை உடையவர்களாகக் காணப்படுகின்றனர், இவர்களே கண்ணகியம்மன் ஆலய நிருவாகிகளாகவும் உள்ளனர்.
சீர்பாத குலமக்கள் செறிந்து வாழும் ஊர்களில் குருமண் வெளியும் ஒன்றாகும். இவ்வூர் மட்டக்களப்பு மாவட்டத்தில் தென் எருவில்பற்று பிரதேசத்தில் அமைந்துள்ளது. இது சீர்பாத குலத்தவர் குடியேறிய எல்லா இடங்களிலும் பார்க்க நீர்வளமும், மண்வளமும் பொருந்திய இடம் இது தான். இவ்வூர் மண்ணை அடிப்படையாகக் கொண்டு குருமண் என்று பெயர் சூட்டினர். காலக்கிரமத்தில் குருமண் வெளியென மருவிற்று. இவ்வூர் குருமன்வெளி கிழக்கு, மேற்கு, குருமன்வெளி12 என மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இங்கு மொத்த சனத்தொகை 3652 ஆகவும் மொத்த குடும்பங்கள் 960 ஆகவும் உள்ளன. இங்கு பிரதான தொழில் விவசாயமாகும். இவ்வூரின் வரலாறு சீர்பாதகுலத்தோடு தொடர்புடையது.
சீர்பாதகுல மக்களில் பலர் மட்டக்களப்பு வடக்கு நோக்கிச் சென்று குறுமன்வெளியில் குடியேறினார்கள். இங்கு குருமண் வெளியைச் சுற்றிவர பெரிய 4 குளங்களும், குளத்து நீர் பாயத்தக்கதாக வயல்வெளிகள் வாவிக்கரைவரையும். சுற்றிவரக் குளங்கள் இருந்தமையினால் இங்கு விவசாயம் செய்வது இலகுவாக இருந்தது.
ஐயர் மார் குருமண்வெளியில் இருந்ததினால் இங்கு இந்தியாவிலிருந்து வந்த ஐயர்மார் திருமணம் செய்வதற்கு வாய்ப்பாக இருந்தது. குருமண் வெளிக்கு மேற்குப்பக்கத்தே வாவிக்கு இடைப்பட்ட விவசாயக் காணிகளில் சில பங்குகள் இச்சமூகத்திலுள் ஐயர்கள் பெயர்களால் அழைக்கப்படுவது நம் கவனத்தினை ஈர்ப்பதாய் உள்ளது மேலும் நீண்டகாலமாக இக்கிராமத்தில் ஐயர் பரம்பரை வாழ்ந்து வருவதனையும் இதற்கு முன் ஐயர் பரம்பரையின் ஒரு பிரிவினர் விபூதி தயாரித்து மட்டக்களப்பு பிரதேசம் எங்கும் விநியோகித்து வந்தமையும் இவர்கள் “திருநீற்று ஐயர்கள்” என்று இவர்களை அழைக்கப்பட்டமையும் அங்குள்ள பெரியோர்கள் நினைவில் உள்ளதனை அவதாணிக்க முடிகின்றது.
குருமன்வெளியின் மத்தியில் சித்திவிநாயகர் ஆலயமும், மரியம்மன் ஆலயமும் இணைந்து பொன்னொளி பரப்புகின்றன. இது தவிர நாகதம்பிரான், ஸ்ரீமாவிஸ்னு ஆலயமும், பத்திகாளியம்மன் ஆலயமும் புகழ்மிக்கவை இவ்வூரில் தொடுகை வயல்கள், விடுவயல்கள் குருமண்வெளி கரைச்சை வெளி நெற்காணிகள் என்பன உள்ளன இவை அவ்வூரில் சித்திவிநாயகர் ஆலயத்திற்கே உரித்தானவையாகும் இங்கு பாட்டுவாழி, காங்கேயன், காலதேவன், பழையன், முழவன், சிந்தன், பொட்டப்பறைச்சி, வெள்ளாகி, நரையாகி குடிகள் என்பனவும் இவை தவிர்ந்த பரதேசி, ஞானி குடிகளும் காணப்படுகின்றது. இவ்வாறாக குருறுமண்வெளியில் எட்டுக் குடிகள் உள்ளன. இவ் எட்டுக் குடிகளுக்குமே சித்திவிநாயகர் ஆலயத்திற்கு நிருவாகத்தினராக இருக்கும் உரிமையடையவர்களாக உள்ளனர். இங்கு நிருவாக முறைமை 8க் குடிக்கும் குடித்தலைவர் தெரிவு செய்யப்படும் இவரை அடம்பன் என்றும் கூறுவதுண்டு இங்கு எடடுக் குடித் தலைவர்களும் ஏகோபித்த சம்மதப்படியே தலைவர் தெரிவு செய்யப்படுகின்றனர் இவரை வண்ணக்கர் என்றும் அழைப்பது மரபாகும். இங்குள்ள நிருவாகம் 9 பேர் சேர்ந்தது பொருளாளர், செயளாளர் தெரிவுசெய்யப்படுவர்.
எட்டுக் குடிகளுக்கும் விசேட பூசை பகிர்ந்நதளிக்கப்பட்டுள்ளது அந்தப் பூசைகளை அப்பூசைக்குரிய குடித்தலைவரும் குடிமக்களும் சேர்ந்து சிறப்பாக செய்து முடிப்பர். சிறப்பான பூசைக்கு வட்டா வைக்கும் முறை சிறப்பானது இது தவிர்ந்த கார்த்திகை விளக்கீட்டுப் பூசை காங்கேயன் குடிமாத்திரம் சுவாமி ஊர்வீதி வலம் வருவதுடன் வெளிவீதியும் வலம் வருவார்கள் இவ்வாறு இவ்வூரில் ஆலயத்தினுடாக மரபுகள் பின்பற்றப்படுவதனைக் காணலாம.; அவ்வூரில் சீர்பாததேவி சிறுவர் பாடசாலை ஒன்று கட்டியதோடு அங்கு அருள் செல்வநாயகததின்; நோக்கத்தினை நிறைவு செய்யும்முகமாக சீர்பாததேவிக்கு சிலை வைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
வீரமுனைய்க்கு பெருமை சேர்த்த தமி அறிஞர் சோமசுந்தரத் தேசிகர்குருமண்வெளியில் திருமணம் மூடித்து தமிழ்ப் பணியும் சமய போதகராய் சிறப்புப் பெற்றமையும் இங்கு குறிப்பிடத் தக்கது.தமிழ் அறிஞர் செல்வநாயகத்தினை பெற்றெடுத்த இவ்வூர் மண்டூர் கணக்கப்பிள்ளைகளில் ஒருவராக இருப்பதுடன் மண்டூர் ஆலயத்தின் 11ம் நாள் திருவிழாவின் போது சீர்பாத குலத்தவரான ஞானிக்குடியினர் புஸ்ப விமான புண்ணியதான சங்கர்ப்பம் செய்யும் உரிமையுடையவர்களாகவும் உள்ளனர். இதை விட 12ம் திருவிழா, 14ம், 16ம் திருவிழா குருமண்வெளி மக்களால் நடத்தப்படடு வருவது குறிப்பிடத்தக்கது.
வீரமுனை, துறைநீலாவணை, குருமண்வெளி போன்ற இடங்களில் சீர்பாதகுலத்தவர் அதிகம் வாழ்வதைப் போன்று சேனைக் குடியிருப்பிலும் வாழ்கின்றனர். இது அம்பாறை மாவட்டத்திலுள்ள கல்முனை தமிழ்பிரிவில் அமைந்துள்ளது சேனைக்குடியிருப்பு1, சேனைக்குடியிருப்பு1டீ, சேனைக்குடியிருப்பு2யு என்னும் மூன்று பிரிவுகள் கொண்டமைந்துள்ள இது 3228 மக்கள் தொகை கொண்ட அழகிய கிராமமாகும். இங்கு வடக்கிலும் மேற்கிலும் பல விவசாய நிலங்களைக் கொண்டமைந்துள்ளதால் இவர்கள் விவாசயத் தொழிலை மேற்கொள்கின்றனர். இங்கு சிந்தன், பாட்டுவாழி, முடவன், பொட்டப்பழச்சி, நரையாவி. வெள்ளாகி, பரதேசி காலதேவன், காங்கேயன் குடிகள் உள்ளன.
சீர்பாத குலமக்களில் ஒரு சாரார் தொழில்வளம் நாடி அயல் இடங்களுக்கு சென்றனர் அதில் மட்டக்களப்பு வாவியின் கிழக்கு கரையோரமாக சென்று காடுகளை வெட்டி பயிர்ச்செய்கையில் ஈடுபட்டனர். பள்ளநிலங்களையும் திருத்தி வயல் நிலங்களாக்கினர். இவர்களோடு வீரமுனையில் இருந்து வந்தவர்களும் சேர்ந்து சேனைச் செய்கையில் ஈடுபட்டார்கள் அவர்கள் அங்கேயே நிலையாகக் குடியேறினர். இவர்கள் இவ்வாறு குடியேறிய இடம் சேனைக்குடியிருப்பு என அழைக்கப்படலாயிற்று. சேனைக்குடியிருப்பின் ஓர் அந்தம் மட்டக்களப்பு வாவியின் துறையாக விளங்கியது. இத்துறை கிட்டங்கித் துறையென அழைக்கப்படுகின்றது.
சேனைக்குடியில் பத்திரகாளியம்மன், மாரியம்மன் ஆலயம், ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயம் என்பன முக்கியமான ஆலயங்களாகும். இதில் பத்திர காளி ஆலயத்தின் திருவுருவம் தென்மேற்கு திசையிலுள்ள சொறிக்கல் முனையில் இருந்து கொண்டுவரப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. இந்தவகையில் சேனைக்குடியிருப்பில் வாழ்கின்ற சீர்பாதகுலத்தவர்கள் சீர்பாத குலப்பண்பாடுகளையும் சிறப்புக்களையும் பேணிப்பாதுகாப்பவர்களாக விளங்குகின்றனர்.
மேலும் சீர்பாத குலத்தவர்கள் வாழ்கின்ற இடங்களில் நாவிதன்வெளி, 7ம் கிராமம், 15ம் கிராமம், தம்பலவத்தை, 13ம் கிராமம், சென்றல் கேம், 6ம் கிராமம், இறாணைமடு போன்ற மேலும் பல கிராமங்களும் விளங்குகின்றன. இவ்வாறான கிராமங்களில் சீர்பாத குலத்தவர்கள் தங்களின் குலப்பண்புகளோடு ஓற்றுமைமிக்க கூட்டுச் சமூகமாக வாழ்கின்றனர்
Tuesday, 18 May 2021
வீரமுனையும் குருமண்வெளியும்
Subscribe to:
Posts (Atom)