Tuesday, 9 February 2021

அருளாந்தம் எனும் அதீத ஆளுமை

அருளாந்தம் எனும் அதீத ஆளுமை



சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன் சேனையூர் மத்திய கல்லூரி சந்தித்த மிகப் பெரும் பல்துறைக் கல்வி ஆளுமை.

வகுப்புக்குள் நுழையும் போதே அவரது கம்பீரக் குரல்  கட்டிப் போட்டு சொல்லும் ஒவ்வொரு சொல்லுக்குமாய் காத்திருக்கும் பொழுதுகள்.பாடம் நடத்தும் விதமே தனி புவியல் பாடத்தை இலக்கியத் தன்மையோடு ஒரு கவித்துவ ஈர்ப்புடன்  சொல்லித் தரும் அந்த நாட்கள் காதுகளில் ஒலிக்க இன்றும் அதே ஈர்ப்புடன் நான்.

முயற்சிக்கு முன்னுதாரணமாய் தன் மாணவர்களுக்கு  வழி காட்டியாய் வாழ்ந்து காட்டி இன்னமும் எழுத்தின் மூலம் தன் ஓய்வுக்கு ஓய்வு கொடுத்துக் கொண்டிருக்கும்  எப்போதும் இயங்கும்   சவால்களை சாதாரணமாக்கி பயணிக்கும் ஒரு பன்முக ஆளுமை என் ஆசான்.

இன்று நாடகத்தால் உலகம் முழுவதும் அறியப்படுகிறேன் என்றால் என் திறமையில் நம்பிக்கை வைத்து சிறப்பு மிகு கதா பத்திரங்களை எனக்கு தந்து என் நடிப்பாற்றலை பார்த்து ரசித்து அழகு பார்த்தவர் என் ஆசான்.

இப்போதெல்லாம் போக்கு வரத்து வசதி ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு  மிகவும் விரைவாக இலகுவாக சென்று விட முடியும் ஆனால் ஐம்பது வருடங்களுக்கு முன் ஆலங்கேணியில் இருந்து சேனையூர் வருவதென்றால் ஐந்து ஆற்றுத் துறைகளை கடந்து பயணிக்க வேண்டும் எங்கள் ஆசான் ஆலங்கேணியில் இருந்து காலை ஊர் ஆசிரியர் வருவதுக்கு முன் ஏழரை மணிக்கு வந்து மேலதிக வகுப்புகளை நாடகப் பயிற்சிகளை தந்து கொண்டு இருப்பார் அர்ப்பணிப்பும் சேவை மனப்பான்மையும் கொண்ட தியாகத் தன்மை வாய்ந்த ஆசான் இன்றுள்ளவர்கள் திருமலை நகரில் இருந்து கிராம பாடசாலைகளுக்கு தயங்கி குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டும் சேவை மனப்பான்மையுடன் தனித்துக் கிடக்கிறார்கள்.

நடிப்பின் பல பரிமாணங்களை நான் கற்றது என் ஆசானிடமிருந்தே எடுத்த காரியம் யாவிலும் வெற்றி பெற்ற சாதனையாளன்  எங்கள் ஆசான்.

கேணிப்பித்தனாய்  தமிழ் கவிதைக்கு மகுடம் சூட்டியவர் என்று சொல்லலாம் கவியரங்குகளில் அவர் கவிதை பாடும் போது கரவொலி வானைத் தாண்டிச் செல்லும்.அவர் தலைமையில் கவிதை வாசித்த தருணங்களை எண்ணிப் பார்க்கிறேன்


என் தமிழ் ஆசான்


என் தமிழ் ஆசான்

கிருஸ்றி குரூஸ்




அண்மைக் காலமாக திரு.பாலசுகுமார் அவர்கள் முகநூலில்
‘நம்வர்களை நாம் அறிவோம்’ எனும் தலைப்பில் நம்மூரைச் சேர்ந்த
பல கல்விமான்கள், ,அதிபர்கள், ஆசிரியர்கள்,இசைவிற்பனர்கள் மற்றும் பல்வேறுபட்ட அறிஞர்கள் என எல்லோரைப் பற்றியும்,மற்றும் அவர்களது திறமைகள்,சேவைகள்,சமூகத்தொண்டுகள் என்பன பற்றிய பல பதிவுகளை பதிந்து அந்தந்த துறையில் அவர்கள் சாதித்த சாதனைகள்பற்றி எல்லோருக்கும் தெரியப்படுத்திக் கொண்டிருக்கின்றார்.

இவ்வாறு மற்ற அறிஞர்கள்,விற்பனர்கள் பற்றி மிகத் தெளிவாக எமக்கும்,எம் அடுத்தலைமுறைக்கும் தெரியப்படுத்திக்கொண்டிருக்கும் திரு.பால சுகுமாருக்கு நன்றி தெரிவிற்கு முகமாக அவர்பற்றி எனக்குத் தெரிந்த நான் கண்டு,கேட்றிந்த,சில விடயங்களை உங்கள் எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ள விரும்பியதன் விளைவே இந்தப்பதிவாகும்,
.
1980-81காலப்பகுதியில் மிகுந்த பெரும் சிரமத்தியின் மத்தியில் மூதூர் புனித அந்தோனியார் பாடசாலையில் க.பொ.த(உ.த)கலைப்பிரிவு ஆரம்பிக்கப்பட்டது,அந்நேரத்தில் உள்ளூரில் காணப்பட்ட சில அரசியல் போட்டியால் எமது உயர்தர வகுப்புக்கான ஆசிரியர் நியமனத்தில் சற்று இழுபறி,மற்றும் ஆசிரியர் பற்றாக்குறை நிலவியது,அச்சமயத்தில்தான் யாழ் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றுக்கொண்டிருந்த திரு.சுகுமார் அவர்கள் எங்கள் கஸ்ட நிலமையை புரிந்துகொண்டு எமக்குதவி செய்யும் முகமாக எம்பாசாலைக்கு வருகைதந்து எமக்கு உயரதர தமிழ் கற்றுத்தந்தார்.

அதுவரை ஒரு தழும்பல் நிலையிலிருந்த எம் உயர்தர வகுப்பானது சற்று சுவாரஸ்யம் நிரம்பிய வகுப்பறையாக மாறத்தொடங்கியது, குறிப்பாக தமிழ்பாடத்தின் மீதான ஆர்வம் அதிகரித்தே காணப்பட்டது எங்கள் எல்லோருக்கும், அதிலும் திரு.சுகுமார் தமிழ்ப்பாடத்தை எமக்கு சொல்லித் தந்தவிதம்,அதற்காக அவர் தரும் விளக்கங்கள்,கற்பிற்கும் முறை என எல்லாம் சேர்ந்து உயர்தர தமிழ்ப்பாடத்தின் மீது ஒரு விதமானன மயக்கத்தை ஏற்படுத்தியது எனலாம்.
அதுமட்டுமின்றி உ-த,தமிழ்ப்பாடம் என்பது வெறுமனே ஒரு பிரிவு கொண்டதல்ல,இலக்கணம்,இலக்கியம் மட்டுமின்றி பல்வேறு சிறு,சிறு பாடப்புத்தகங்களையும் கொண்டதது (இப்போதைய பாடத்திட்டம் பற்றி தெரியவில்லை) அதுமட்டுமல்ல ஒரு நிரந்திர ஆசிரியர் அற்ற நிலையில் மிக சிரமத்தின் மத்திலேயே எம் கல்வி தொடர்ந்தது, அப்பொழுதுதான் எங்கள் பாடசாலை அதிபரின் வேண்டுகோளை ஏற்று எமக்கு தமிழ்ப் பாடம் கற்பித்தவர்தான் திரு பால சுகுமார்.

என்னுடைய இன்றைய தமிழுக்கும்,தமிழ் எழுத்துக்கும் பிள்ளையார் சுழி போட்டவர் திரு.சுகுமார் அவர்களே ஆவார்;;;,

  -என் தமிழ் மொழியை நடை அலகில் போதித்த என் ஆசான்-
    - செம்மொழியாம் தமிழை எனக்கு பேசிக்காட்டி,எங்கே,எப்படி,என்ன       பேசவேண்டுமென போதித்த என் முதல் தமிழ் ஆசான்
-அகரம் தொடங்கி சிகரம் வரை,ஆத்திசூடி உட்பட அனைத்தையும் எனக்கு தெளிவுபடுத்திய என் முதல் தமிழ் ஆசான்-
-திருக்குறளை தெளிவுற பொருள் புரிய வைத்த என் முதல் தமிழ் ஆசான்
எனக்குள் தமிழ் அறிவுப் பசியினை ஏற்படுத்தி,தமிழ் மீதும்,தமிழ் இலக்கியத்தின் மீதும் ஊக்கம் தந்து நிகழ்கால படிப்பினை,எதிர்கால வாழ்வுக்கு நிலையாக்கிய என் முதல் தமிழ் ஆசான்.

அன்று திரு.சுகுமாரினால் இடப்பட்ட பிள்ளையார் சுழியே எனக்கு க.பொ.த(உ-த)பரீட்சையில் சித்தி பெறவும்,பின்னாளில் ‘வீரகேசரி’ என்ற பத்திரிகை நிறுவனத்தில் ஒரு பத்திரிகையாளனாக பணிபுரியவும் வழிவகுத்தது மட்டுமின்றி,இன்று வரை தொடர்கின்ற என் தமிழுக்கும்,தமிழ் எழுத்துக்கும் மூலகாரணம் திரு,பால சுகுமார் அவர்களே,

இவ்வாறு எமதூரில் உள்ள பல மாணவர்களின் உயர்கல்விக்கும்,பின்னாளில் அவர்கள் பல்கலைக்கழகங்கள் சென்று பட்டப்படிப்புக்களைத் தொடரவும் ஒரு சிறந்த ஆசிரியராக மட்டுமின்றி,நல்ல வழிகாட்டியாகவும் திகழ்ந்தவர் திரு.பால சுகுமார் அவர்களே.

அதுமட்டுமின்றி,அவரின் கல்விச்சேவை தொடர்ந்து நீண்டுகொண்டே சென்றது,
அதன் ஒரு பகுதியாகவே திரு.சுகுமார் அவர்கள்,

-கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சுமார் 14வருடங்கள் விரிவுரையாராக பணிபரிந்தமை,
-கிழக்குப் பல்கலைக் கழக நுண்கலைத்துறை தலைவராக பணிபுரிந்தமை,
-கிழக்குப் பல்கலைக் கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிலையத்தின் இணைப்பாளராக கடமையாற்றியமை,
-கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீட பீடாதிபதியாக பணிபுரிந்தமை
என கல்வித்துறையில் பல பதவிகளையையும் தன்னகத்தே கொண்டுள்ள ஒரு ஒப்பற்ற கல்வியாளர் ஆவார்.

மேலும்,
அனாமிகா பதிப்பகத்தின் மூலம் இதுவரை முப்பது நூல்கள் வெளியிட்டு தன் தமிழ் எழுத்து திறமையையும் எமக்கு வெளிப்படுத்தியுள்ளார்.

அத்துடன் பல சர்வதேச மகாநாடுகளில்(இந்தியா,மலேசியா,பிரான்ஸ்,இத்தாலி)
பங்கேற்று தன் பேச்சுத்திறனையும் வெளிப்படுத்தி உலக அரங்கில் எம்மூருக்கும்,கிழக்கு மண்ணுக்கும்  பல பெருமைகளை பெற்றுத்தந்துள்ளார்.

மேலும் பலருக்கு திரு.சுகுமார் அவர்களை ஒரு ஆசிரியராக,விரிவுரையாளராக ,எழுத்தாளராக மட்டுமே தெரிந்திருக்கும், ஆனால் அதையும் தாண்டிய இன்னுமொரு திறமையும் கொண்டவர் அவர், ஆம் ஒரு நாடக நடிகர்,தயாரிப்பாளர்,இயக்குனர்,ஒப்பனையாளர் என ஒரு பன்முக தோற்றமும்,திறமையும் மிக்கவர். இதுவரை தயாரித்து நெறியாள்கை செய்த நாடகங்கள் மட்டுமே  ஐம்பதுக்கு மேல்.

இவற்றிற்கும் மேலாக,
ஈழத்து வட மோடி தமிழக தெருக்கூத்து ஆகியவற்றிலும் ஏனைய கூத்துக்களிலும் அறிக்கை ஆராய்ச்சி என துறை சார் ஆற்றல் கொண்டவர்

கிழக்குப் பல்கலைக் கழகத்திலும் உலக நாடுகளிலும் இன்னியத்தை அறிமுகம் செய்து பயிற்சி அளித்தது ஈழத்  தமிழர் அடையாளமாக அதனை முன்னிலைப் படுத்தியதுடன், நோர்வே ,பிரான்ஸ்,இங்கிலாந்து ஆகிய நாடுகளில் அவற்றை பரவலாக்கி அதன் வளர்ச்சிக்கு இன்றுவரை துணைநிற்பவர்

ஈழத் தமிழர்களுக்கான நடன முறையாக ஈழ நாட்டியம் எனும் புத்தாக்கத்தை உலகிற்கு அறிமுகம் செய்தவர்

புலம் பெயர் நாடுகளில் தமிழ் கல்வி பற்றி வள ஆலோசகராக பல்வேறு நாடுகளிலும் அறியப் பட்ட பேராசிரியர்
இவ்வாறு பல்வேறுபட்ட திறமைகளையையும்,அறிவையையும் கொண்டுள்ள எமதூரின் கல்வியாளருக்கு ஒரு மாணவனாக,உறவினனாக என்நன்றியை
தெரிவித்துக்கொள்வதோடு,அவரின் சேவைகள் அனைத்தும்,உள்நாட்டிலும்,புலம்பெயர் தேசத்திலும் இனிதே தொடரந்திட வாழ்த்தி வணங்குகின்றேன். 

--மூதூர் மண்  தமிழ் கூறும் நல்லுலகுக்கு கொடுத்த கொடை.