Friday, 16 July 2021

மாடத்தி

 மாடத்தி


மாடத்தி பார்த்தேன் மனம் கனத்துக் கிடக்கிறது


தமிழ் சினிமா இதுவரை தொடாத களத்தின் கதையை திரை மொழியாக்கியிருக்கிறார் லீனா மணிமேகலை.


ஆவணப் படங்கள் குறும் படங்கள் மற்றும் கதைப் படங்கள் என  மாற்று தமிழ் சினிமாவின் ஒரு முகமாய் வித்தியாசமான திரை மொழியை நம் முன் கொண்டு வருபவர் லீனா. சமூக அக்கறையுடன் கலை உருவாக்கத்தையும் அதன் செல் நெறியையும் நேசிக்கும் முக்கியமான படைபாளி அவர்.கவிதைகளில் பெண் மொழியின் தனித்துவத்தை தடம் மாறாமல் சொல்லும் கலைஞர்.இன்று மாடத்தி எனும் திரைப் படத்தின் மூலம் தமிழ் நாட்டில் பேச வேண்டிய விடயங்கள் எவ்வளவோ உள்ளன என்பதை கலை நேர்த்தியுடன் சொல்லியிருக்கிறார் மாடத்தியில்.


மிகச் சாதாரணமாகவே தொடங்குகின்ற திரைப்படம் ஓவியங்களின் மூலம் காட்சிப் படிமங்கள் மூலம் கதை சொல்லும் உத்தியை வெற்றிகரமாக கையாண்டிருக்கிறார்  


புதிர் வண்ணார் என்கிற சமூகம் மேல் சாதியினரின் அடக்கு முறை என நகரும் கதை ஒரு சாதியினரை அவர்கள் அவலங்களின் ஒரு பருக்கைதான் இந்தக் கதையானாலும் .தமிழ் நாட்டில் உள்ள அடக்கப் பட்ட்ட தலித் சமூகங்களின் வாழ்வு இன்று வரை ஆண்டான் அடிமை முறையிலேயே உள்ளது என்பதன் குறி காட்டி இந்தத் திரைப்படம்.


தமிழ் அதன் பெருமை என மார் தட்டிக் கொள்ளும் ஒரு காலச் சூழலில் தமிழ் சமூகம்  கேவலம் மிக்க சாதிய ஒடுக்கு முறை அகலாத வாழ் நிலை கொண்டதாக உள்ளமையின் வெளிப்பாடு இத் திரைப்படம் .


குறிப்பாக சாதிய வன்மத்துக்கு எப்படி பலியாகிறார்கள் என்பதன் கதைச் சித்தரிப்பும் பாத்திரங்களின் இயல்பான வாழ்வியலும் ,காட்சிகள் ஒன்றன் பின் ஒன்றாய் பின்னப் பட்டு கதை வளர் முரண்களில் சாதியக் கட்டுமானத்தின் வன்மம் காலம் காலமாய் தாயிலிருந்து மகள் மகளில் இருந்து தொடரும் பரம்பரை காட்டு மிராண்டித் தனமாக சிதைக்கப் படும் அவலம் மாடத்தி வரை நீள்கிறது.


தமிழ் நாட்டு கிராமத் தெய்வங்களின் உருவாக்கங்கள் இத்தகய ஒரு பின் புலத்தில் பெண் தெய்வமாக்கப் பட்டு அவள் புனிதங்களின் கடவுள் என்பதை மாடத்தி உடைத்து நம் முன் கொண்டு வருகிறாள்.


தமிழ் சினிமா பேச வேண்டிய எவ்வளவோ விடயங்கள் இருக்கின்றன என்பதை லீனா இந்த திரைபடத்தின் மூலம் உணர வைத்திருக்கிறார் 


பெண் மொழியாய் மாடத்தி நம் முன் உயர்ந்து நிற்கிறாள்.


இதில் பங்கு கொண்ட நடிக,நடிகையர்கள் இயல்பாகவே பாத்திரங்களாக உலா வருகின்றனர்


வாணியாக வருகின்ற செம்மலர் அன்னம் அந்த பாத்திரத்திற்கு ஊயிரோட்டமான உடல்  மொழியில் பதகழிப்பு படம் முழுவதும் நம்மை பதட்டமடைய வைக்கிறது ஏதோ நடக்கப் போகிறது என்பதை எதிர்வு கூறிக் கொண்டே இருக்கிறது.தன் மிகச் சிறந்த நடிப்பை வெளிப் படுத்தி முன்னிலைப் படுகிறார் அன்னம்.


யோசனாவாக வருகின்ற அச்மினார் ஹாசிம் மெல்ல மெல்ல வளர் பருவத்தின் மாற்றத்தை வெளிப்படுத்துவதில் இன்னமும் கொஞ்சம் அதிக கவனம் செலுத்தியிருக்கலாம் போலத் தெரிகிறது.


ஒளிப்பதிவும் இசையும் திரை மொழியில் நம்மை ஒன்றிப்பதில் வெற்றி கண்டிருக்கின்றன என்றால் மிகையில்லை.


மாடத்தி மனதில் கனத்துக் கிடக்கிறாள்

Tuesday, 18 May 2021

வீரமுனையும் குருமண்வெளியும்

வீரமுனையும் குருமண்வெளியும்
சோழ நாட்டில் இருந்து சீர்பாத தேவிக்கு துணையாக வந்தவர்கள் இறைவனது அருளால் வீரமுனை வந்து சீர்பாத குலமாகி வீரமுனையில் வாழ்ந்தமை யாவரும் அறிந்ததே. வீரமுனையில் வாழ்ந்த சீர்பாத குலத்தினர் காலத்தின் ஓட்டத்தினால் பெருகி வந்தனர். மக்களது பெருக்கத்துக்கு ஏற்ப உழுது வாழும் தொழில் வளம் வீரமுனையில் பெருகவில்லை. ஆதலினால் வீரமுனையில் வாழ்ந்தவர்களது கவனம். உழுது பயிரிடுவதற்கு ஏற்ற புதிய இடங்களை நாடுவதில் சென்றது. அதன் பயனாக மட்டக்களப்பு வாவியை அண்டிய பல இடங்கள் அவர்களது கவனத்தை கவர்ந்திழுத்தன.

முதலில் நீலன் அணைப்பகுதி அவர்களது நோக்கிற்கு உகந்த இடமாக தோன்றியது. ஆகவே நீலன் அணைப்பகுதிக்குச் சென்று உழுதொழில் செய்வதற்குரிய ஆயத்தங்களை ஏற்படுத்தினர். காடுகளை அளித்தும், காணிகளை செப்பனிடுவதும் பயிர்களை பாதுகாப்பதும் முதலில் சிரமமாகவே இருந்தது. ஆதலினால் நீலன் அணைப்பகுதியில் நிரந்தரமாய் குடியேறிவாழலாயினர். வளம் ததும்பிய மேற்குப்பகுதியும் அவர்களது கவனத்தை ஈர்த்தமையினால் துறையமைத்து போக்குவரத்து செய்தார்கள். அதன் பயனாக நீலன் அணையெனும் பெயர் துறைநீலன் அணையென வழங்குவதாயிற்று. காலவரையில் துறைநீலாவணையென அழைக்கப்படலாயிற்று. குடியேறிய மக்கள் சூழவுள்ள பள்ள நிலங்களை விவசாய நிலங்களாக செப்பனிட்டார்கள். மேற்குக் கரையிலுள்ள மேட்டு; வயல் வெளிகளில் மந்தை வளர்த்தார்கள். மேட்டு நிலங்களில் இல்லங்கள் அமைத்து வாழத் தொடங்கினர்.

மேலும் இக்கிராமம் மண்டூர் கோயில் தோற்றத்தோடு தொடர்புடையது. அதாவது சீர்பாததேவி வழிபட்டு வந்த வேலினை சிந்தன் அங்கு சீர்பாதகுலத்தவரிடையயே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் எடுத்துச் சென்று தி;ல்லை மரத்தின் மீது பதித்துவைத்தான். அவ்வேலே மண்டூர் கந்த சுவாமிகோயிலில் வழிபாட்டுக்குரிய வேலாக விளங்குகின்றது. அவ்வேலினைக் கொண்டுவந்த சிந்தன் துறைநீலாவணையிலேயே வாழ்ந்தான் இதனால் இங்கு சிந்தாத்திரன் குடியானவர்கள் அதிகளவாக வாழ்கின்றனர்.

சிந்தாத்திரன், பழச்சிகுடி, காலதேவன்குடி, படையாண்ட குடி, கங்கேயன்குடி, பரதேசிகுடி, வெள்ளாகிகுடி, நரையாகி குடி, ஞானி குடி, பாட்டுவாழி குடி, முடவன் குடி என 11 குடிகளை துறைநீலாவணைச் செப்போடு கூறுகின்றது. துiநீலாவணைக் கிராமத்திலே சிந்தாத்திரன், பாட்டுவாழி, முடவன் குடியினரே அதிக முக்கியத்துவத்தினை உடையவர்களாகக் காணப்படுகின்றனர், இவர்களே கண்ணகியம்மன் ஆலய நிருவாகிகளாகவும் உள்ளனர்.

சீர்பாத குலமக்கள் செறிந்து வாழும் ஊர்களில் குருமண் வெளியும் ஒன்றாகும். இவ்வூர் மட்டக்களப்பு மாவட்டத்தில் தென் எருவில்பற்று பிரதேசத்தில் அமைந்துள்ளது. இது சீர்பாத குலத்தவர் குடியேறிய எல்லா இடங்களிலும் பார்க்க நீர்வளமும், மண்வளமும் பொருந்திய இடம் இது தான். இவ்வூர் மண்ணை அடிப்படையாகக் கொண்டு குருமண் என்று பெயர் சூட்டினர். காலக்கிரமத்தில் குருமண் வெளியென மருவிற்று. இவ்வூர் குருமன்வெளி கிழக்கு, மேற்கு, குருமன்வெளி12 என மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இங்கு மொத்த சனத்தொகை 3652 ஆகவும் மொத்த குடும்பங்கள் 960 ஆகவும் உள்ளன. இங்கு பிரதான தொழில் விவசாயமாகும். இவ்வூரின் வரலாறு சீர்பாதகுலத்தோடு தொடர்புடையது.

சீர்பாதகுல மக்களில் பலர் மட்டக்களப்பு வடக்கு நோக்கிச் சென்று குறுமன்வெளியில் குடியேறினார்கள். இங்கு குருமண் வெளியைச் சுற்றிவர பெரிய 4 குளங்களும், குளத்து நீர் பாயத்தக்கதாக வயல்வெளிகள் வாவிக்கரைவரையும். சுற்றிவரக் குளங்கள் இருந்தமையினால் இங்கு விவசாயம் செய்வது இலகுவாக இருந்தது.

 ஐயர் மார் குருமண்வெளியில் இருந்ததினால் இங்கு இந்தியாவிலிருந்து வந்த ஐயர்மார் திருமணம் செய்வதற்கு வாய்ப்பாக இருந்தது. குருமண் வெளிக்கு மேற்குப்பக்கத்தே வாவிக்கு இடைப்பட்ட விவசாயக் காணிகளில் சில பங்குகள் இச்சமூகத்திலுள் ஐயர்கள் பெயர்களால் அழைக்கப்படுவது நம் கவனத்தினை ஈர்ப்பதாய் உள்ளது மேலும் நீண்டகாலமாக இக்கிராமத்தில் ஐயர் பரம்பரை வாழ்ந்து வருவதனையும் இதற்கு முன் ஐயர் பரம்பரையின் ஒரு பிரிவினர் விபூதி தயாரித்து மட்டக்களப்பு பிரதேசம் எங்கும் விநியோகித்து வந்தமையும் இவர்கள் “திருநீற்று ஐயர்கள்” என்று இவர்களை அழைக்கப்பட்டமையும் அங்குள்ள பெரியோர்கள் நினைவில் உள்ளதனை அவதாணிக்க முடிகின்றது.

குருமன்வெளியின் மத்தியில் சித்திவிநாயகர் ஆலயமும், மரியம்மன் ஆலயமும் இணைந்து பொன்னொளி பரப்புகின்றன. இது தவிர நாகதம்பிரான், ஸ்ரீமாவிஸ்னு ஆலயமும், பத்திகாளியம்மன் ஆலயமும் புகழ்மிக்கவை இவ்வூரில் தொடுகை வயல்கள், விடுவயல்கள் குருமண்வெளி கரைச்சை வெளி நெற்காணிகள் என்பன உள்ளன இவை அவ்வூரில் சித்திவிநாயகர் ஆலயத்திற்கே உரித்தானவையாகும் இங்கு பாட்டுவாழி, காங்கேயன், காலதேவன், பழையன், முழவன், சிந்தன்,  பொட்டப்பறைச்சி, வெள்ளாகி, நரையாகி குடிகள் என்பனவும் இவை தவிர்ந்த பரதேசி, ஞானி குடிகளும் காணப்படுகின்றது. இவ்வாறாக குருறுமண்வெளியில் எட்டுக் குடிகள் உள்ளன. இவ் எட்டுக் குடிகளுக்குமே சித்திவிநாயகர் ஆலயத்திற்கு நிருவாகத்தினராக இருக்கும் உரிமையடையவர்களாக உள்ளனர். இங்கு நிருவாக முறைமை 8க் குடிக்கும் குடித்தலைவர் தெரிவு செய்யப்படும் இவரை அடம்பன் என்றும் கூறுவதுண்டு இங்கு எடடுக் குடித் தலைவர்களும் ஏகோபித்த சம்மதப்படியே தலைவர் தெரிவு செய்யப்படுகின்றனர் இவரை வண்ணக்கர் என்றும் அழைப்பது மரபாகும். இங்குள்ள நிருவாகம் 9 பேர் சேர்ந்தது பொருளாளர், செயளாளர் தெரிவுசெய்யப்படுவர்.

எட்டுக் குடிகளுக்கும் விசேட பூசை பகிர்ந்நதளிக்கப்பட்டுள்ளது அந்தப் பூசைகளை அப்பூசைக்குரிய குடித்தலைவரும் குடிமக்களும் சேர்ந்து சிறப்பாக செய்து முடிப்பர். சிறப்பான பூசைக்கு வட்டா வைக்கும் முறை சிறப்பானது இது தவிர்ந்த கார்த்திகை விளக்கீட்டுப் பூசை காங்கேயன் குடிமாத்திரம் சுவாமி ஊர்வீதி வலம் வருவதுடன்  வெளிவீதியும் வலம் வருவார்கள் இவ்வாறு இவ்வூரில் ஆலயத்தினுடாக மரபுகள் பின்பற்றப்படுவதனைக் காணலாம.; அவ்வூரில் சீர்பாததேவி சிறுவர் பாடசாலை ஒன்று கட்டியதோடு அங்கு அருள் செல்வநாயகததின்; நோக்கத்தினை நிறைவு செய்யும்முகமாக சீர்பாததேவிக்கு சிலை வைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

வீரமுனைய்க்கு பெருமை சேர்த்த  தமி அறிஞர் சோமசுந்தரத் தேசிகர்குருமண்வெளியில் திருமணம் மூடித்து தமிழ்ப் பணியும் சமய போதகராய்  சிறப்புப் பெற்றமையும்  இங்கு குறிப்பிடத் தக்கது.தமிழ் அறிஞர் செல்வநாயகத்தினை பெற்றெடுத்த இவ்வூர் மண்டூர் கணக்கப்பிள்ளைகளில் ஒருவராக இருப்பதுடன் மண்டூர் ஆலயத்தின் 11ம் நாள் திருவிழாவின் போது சீர்பாத குலத்தவரான ஞானிக்குடியினர் புஸ்ப விமான புண்ணியதான சங்கர்ப்பம் செய்யும் உரிமையுடையவர்களாகவும் உள்ளனர். இதை விட 12ம் திருவிழா, 14ம், 16ம் திருவிழா குருமண்வெளி மக்களால் நடத்தப்படடு வருவது குறிப்பிடத்தக்கது.
 
வீரமுனை, துறைநீலாவணை, குருமண்வெளி போன்ற இடங்களில் சீர்பாதகுலத்தவர் அதிகம் வாழ்வதைப் போன்று சேனைக் குடியிருப்பிலும் வாழ்கின்றனர். இது அம்பாறை மாவட்டத்திலுள்ள கல்முனை தமிழ்பிரிவில் அமைந்துள்ளது சேனைக்குடியிருப்பு1, சேனைக்குடியிருப்பு1டீ, சேனைக்குடியிருப்பு2யு என்னும் மூன்று பிரிவுகள் கொண்டமைந்துள்ள இது 3228 மக்கள் தொகை கொண்ட அழகிய கிராமமாகும். இங்கு வடக்கிலும் மேற்கிலும் பல விவசாய நிலங்களைக் கொண்டமைந்துள்ளதால் இவர்கள் விவாசயத் தொழிலை மேற்கொள்கின்றனர். இங்கு சிந்தன், பாட்டுவாழி, முடவன், பொட்டப்பழச்சி, நரையாவி. வெள்ளாகி, பரதேசி காலதேவன், காங்கேயன் குடிகள் உள்ளன.

சீர்பாத குலமக்களில் ஒரு சாரார் தொழில்வளம் நாடி அயல் இடங்களுக்கு சென்றனர் அதில் மட்டக்களப்பு வாவியின் கிழக்கு கரையோரமாக சென்று காடுகளை வெட்டி பயிர்ச்செய்கையில் ஈடுபட்டனர். பள்ளநிலங்களையும் திருத்தி வயல் நிலங்களாக்கினர். இவர்களோடு வீரமுனையில் இருந்து வந்தவர்களும் சேர்ந்து சேனைச் செய்கையில் ஈடுபட்டார்கள் அவர்கள் அங்கேயே நிலையாகக் குடியேறினர். இவர்கள் இவ்வாறு குடியேறிய இடம் சேனைக்குடியிருப்பு என அழைக்கப்படலாயிற்று. சேனைக்குடியிருப்பின் ஓர் அந்தம் மட்டக்களப்பு வாவியின் துறையாக விளங்கியது.  இத்துறை கிட்டங்கித் துறையென அழைக்கப்படுகின்றது.

சேனைக்குடியில் பத்திரகாளியம்மன், மாரியம்மன் ஆலயம், ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயம் என்பன முக்கியமான ஆலயங்களாகும். இதில் பத்திர காளி ஆலயத்தின் திருவுருவம் தென்மேற்கு திசையிலுள்ள சொறிக்கல் முனையில் இருந்து கொண்டுவரப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. இந்தவகையில் சேனைக்குடியிருப்பில் வாழ்கின்ற சீர்பாதகுலத்தவர்கள் சீர்பாத குலப்பண்பாடுகளையும் சிறப்புக்களையும் பேணிப்பாதுகாப்பவர்களாக விளங்குகின்றனர்.

மேலும் சீர்பாத குலத்தவர்கள் வாழ்கின்ற இடங்களில் நாவிதன்வெளி, 7ம் கிராமம், 15ம் கிராமம், தம்பலவத்தை, 13ம் கிராமம், சென்றல் கேம், 6ம் கிராமம், இறாணைமடு போன்ற மேலும் பல கிராமங்களும் விளங்குகின்றன. இவ்வாறான கிராமங்களில் சீர்பாத குலத்தவர்கள் தங்களின் குலப்பண்புகளோடு ஓற்றுமைமிக்க கூட்டுச் சமூகமாக வாழ்கின்றனர்

Tuesday, 9 February 2021

அருளாந்தம் எனும் அதீத ஆளுமை

அருளாந்தம் எனும் அதீத ஆளுமை



சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன் சேனையூர் மத்திய கல்லூரி சந்தித்த மிகப் பெரும் பல்துறைக் கல்வி ஆளுமை.

வகுப்புக்குள் நுழையும் போதே அவரது கம்பீரக் குரல்  கட்டிப் போட்டு சொல்லும் ஒவ்வொரு சொல்லுக்குமாய் காத்திருக்கும் பொழுதுகள்.பாடம் நடத்தும் விதமே தனி புவியல் பாடத்தை இலக்கியத் தன்மையோடு ஒரு கவித்துவ ஈர்ப்புடன்  சொல்லித் தரும் அந்த நாட்கள் காதுகளில் ஒலிக்க இன்றும் அதே ஈர்ப்புடன் நான்.

முயற்சிக்கு முன்னுதாரணமாய் தன் மாணவர்களுக்கு  வழி காட்டியாய் வாழ்ந்து காட்டி இன்னமும் எழுத்தின் மூலம் தன் ஓய்வுக்கு ஓய்வு கொடுத்துக் கொண்டிருக்கும்  எப்போதும் இயங்கும்   சவால்களை சாதாரணமாக்கி பயணிக்கும் ஒரு பன்முக ஆளுமை என் ஆசான்.

இன்று நாடகத்தால் உலகம் முழுவதும் அறியப்படுகிறேன் என்றால் என் திறமையில் நம்பிக்கை வைத்து சிறப்பு மிகு கதா பத்திரங்களை எனக்கு தந்து என் நடிப்பாற்றலை பார்த்து ரசித்து அழகு பார்த்தவர் என் ஆசான்.

இப்போதெல்லாம் போக்கு வரத்து வசதி ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு  மிகவும் விரைவாக இலகுவாக சென்று விட முடியும் ஆனால் ஐம்பது வருடங்களுக்கு முன் ஆலங்கேணியில் இருந்து சேனையூர் வருவதென்றால் ஐந்து ஆற்றுத் துறைகளை கடந்து பயணிக்க வேண்டும் எங்கள் ஆசான் ஆலங்கேணியில் இருந்து காலை ஊர் ஆசிரியர் வருவதுக்கு முன் ஏழரை மணிக்கு வந்து மேலதிக வகுப்புகளை நாடகப் பயிற்சிகளை தந்து கொண்டு இருப்பார் அர்ப்பணிப்பும் சேவை மனப்பான்மையும் கொண்ட தியாகத் தன்மை வாய்ந்த ஆசான் இன்றுள்ளவர்கள் திருமலை நகரில் இருந்து கிராம பாடசாலைகளுக்கு தயங்கி குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டும் சேவை மனப்பான்மையுடன் தனித்துக் கிடக்கிறார்கள்.

நடிப்பின் பல பரிமாணங்களை நான் கற்றது என் ஆசானிடமிருந்தே எடுத்த காரியம் யாவிலும் வெற்றி பெற்ற சாதனையாளன்  எங்கள் ஆசான்.

கேணிப்பித்தனாய்  தமிழ் கவிதைக்கு மகுடம் சூட்டியவர் என்று சொல்லலாம் கவியரங்குகளில் அவர் கவிதை பாடும் போது கரவொலி வானைத் தாண்டிச் செல்லும்.அவர் தலைமையில் கவிதை வாசித்த தருணங்களை எண்ணிப் பார்க்கிறேன்


என் தமிழ் ஆசான்


என் தமிழ் ஆசான்

கிருஸ்றி குரூஸ்




அண்மைக் காலமாக திரு.பாலசுகுமார் அவர்கள் முகநூலில்
‘நம்வர்களை நாம் அறிவோம்’ எனும் தலைப்பில் நம்மூரைச் சேர்ந்த
பல கல்விமான்கள், ,அதிபர்கள், ஆசிரியர்கள்,இசைவிற்பனர்கள் மற்றும் பல்வேறுபட்ட அறிஞர்கள் என எல்லோரைப் பற்றியும்,மற்றும் அவர்களது திறமைகள்,சேவைகள்,சமூகத்தொண்டுகள் என்பன பற்றிய பல பதிவுகளை பதிந்து அந்தந்த துறையில் அவர்கள் சாதித்த சாதனைகள்பற்றி எல்லோருக்கும் தெரியப்படுத்திக் கொண்டிருக்கின்றார்.

இவ்வாறு மற்ற அறிஞர்கள்,விற்பனர்கள் பற்றி மிகத் தெளிவாக எமக்கும்,எம் அடுத்தலைமுறைக்கும் தெரியப்படுத்திக்கொண்டிருக்கும் திரு.பால சுகுமாருக்கு நன்றி தெரிவிற்கு முகமாக அவர்பற்றி எனக்குத் தெரிந்த நான் கண்டு,கேட்றிந்த,சில விடயங்களை உங்கள் எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ள விரும்பியதன் விளைவே இந்தப்பதிவாகும்,
.
1980-81காலப்பகுதியில் மிகுந்த பெரும் சிரமத்தியின் மத்தியில் மூதூர் புனித அந்தோனியார் பாடசாலையில் க.பொ.த(உ.த)கலைப்பிரிவு ஆரம்பிக்கப்பட்டது,அந்நேரத்தில் உள்ளூரில் காணப்பட்ட சில அரசியல் போட்டியால் எமது உயர்தர வகுப்புக்கான ஆசிரியர் நியமனத்தில் சற்று இழுபறி,மற்றும் ஆசிரியர் பற்றாக்குறை நிலவியது,அச்சமயத்தில்தான் யாழ் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றுக்கொண்டிருந்த திரு.சுகுமார் அவர்கள் எங்கள் கஸ்ட நிலமையை புரிந்துகொண்டு எமக்குதவி செய்யும் முகமாக எம்பாசாலைக்கு வருகைதந்து எமக்கு உயரதர தமிழ் கற்றுத்தந்தார்.

அதுவரை ஒரு தழும்பல் நிலையிலிருந்த எம் உயர்தர வகுப்பானது சற்று சுவாரஸ்யம் நிரம்பிய வகுப்பறையாக மாறத்தொடங்கியது, குறிப்பாக தமிழ்பாடத்தின் மீதான ஆர்வம் அதிகரித்தே காணப்பட்டது எங்கள் எல்லோருக்கும், அதிலும் திரு.சுகுமார் தமிழ்ப்பாடத்தை எமக்கு சொல்லித் தந்தவிதம்,அதற்காக அவர் தரும் விளக்கங்கள்,கற்பிற்கும் முறை என எல்லாம் சேர்ந்து உயர்தர தமிழ்ப்பாடத்தின் மீது ஒரு விதமானன மயக்கத்தை ஏற்படுத்தியது எனலாம்.
அதுமட்டுமின்றி உ-த,தமிழ்ப்பாடம் என்பது வெறுமனே ஒரு பிரிவு கொண்டதல்ல,இலக்கணம்,இலக்கியம் மட்டுமின்றி பல்வேறு சிறு,சிறு பாடப்புத்தகங்களையும் கொண்டதது (இப்போதைய பாடத்திட்டம் பற்றி தெரியவில்லை) அதுமட்டுமல்ல ஒரு நிரந்திர ஆசிரியர் அற்ற நிலையில் மிக சிரமத்தின் மத்திலேயே எம் கல்வி தொடர்ந்தது, அப்பொழுதுதான் எங்கள் பாடசாலை அதிபரின் வேண்டுகோளை ஏற்று எமக்கு தமிழ்ப் பாடம் கற்பித்தவர்தான் திரு பால சுகுமார்.

என்னுடைய இன்றைய தமிழுக்கும்,தமிழ் எழுத்துக்கும் பிள்ளையார் சுழி போட்டவர் திரு.சுகுமார் அவர்களே ஆவார்;;;,

  -என் தமிழ் மொழியை நடை அலகில் போதித்த என் ஆசான்-
    - செம்மொழியாம் தமிழை எனக்கு பேசிக்காட்டி,எங்கே,எப்படி,என்ன       பேசவேண்டுமென போதித்த என் முதல் தமிழ் ஆசான்
-அகரம் தொடங்கி சிகரம் வரை,ஆத்திசூடி உட்பட அனைத்தையும் எனக்கு தெளிவுபடுத்திய என் முதல் தமிழ் ஆசான்-
-திருக்குறளை தெளிவுற பொருள் புரிய வைத்த என் முதல் தமிழ் ஆசான்
எனக்குள் தமிழ் அறிவுப் பசியினை ஏற்படுத்தி,தமிழ் மீதும்,தமிழ் இலக்கியத்தின் மீதும் ஊக்கம் தந்து நிகழ்கால படிப்பினை,எதிர்கால வாழ்வுக்கு நிலையாக்கிய என் முதல் தமிழ் ஆசான்.

அன்று திரு.சுகுமாரினால் இடப்பட்ட பிள்ளையார் சுழியே எனக்கு க.பொ.த(உ-த)பரீட்சையில் சித்தி பெறவும்,பின்னாளில் ‘வீரகேசரி’ என்ற பத்திரிகை நிறுவனத்தில் ஒரு பத்திரிகையாளனாக பணிபுரியவும் வழிவகுத்தது மட்டுமின்றி,இன்று வரை தொடர்கின்ற என் தமிழுக்கும்,தமிழ் எழுத்துக்கும் மூலகாரணம் திரு,பால சுகுமார் அவர்களே,

இவ்வாறு எமதூரில் உள்ள பல மாணவர்களின் உயர்கல்விக்கும்,பின்னாளில் அவர்கள் பல்கலைக்கழகங்கள் சென்று பட்டப்படிப்புக்களைத் தொடரவும் ஒரு சிறந்த ஆசிரியராக மட்டுமின்றி,நல்ல வழிகாட்டியாகவும் திகழ்ந்தவர் திரு.பால சுகுமார் அவர்களே.

அதுமட்டுமின்றி,அவரின் கல்விச்சேவை தொடர்ந்து நீண்டுகொண்டே சென்றது,
அதன் ஒரு பகுதியாகவே திரு.சுகுமார் அவர்கள்,

-கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சுமார் 14வருடங்கள் விரிவுரையாராக பணிபரிந்தமை,
-கிழக்குப் பல்கலைக் கழக நுண்கலைத்துறை தலைவராக பணிபுரிந்தமை,
-கிழக்குப் பல்கலைக் கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிலையத்தின் இணைப்பாளராக கடமையாற்றியமை,
-கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீட பீடாதிபதியாக பணிபுரிந்தமை
என கல்வித்துறையில் பல பதவிகளையையும் தன்னகத்தே கொண்டுள்ள ஒரு ஒப்பற்ற கல்வியாளர் ஆவார்.

மேலும்,
அனாமிகா பதிப்பகத்தின் மூலம் இதுவரை முப்பது நூல்கள் வெளியிட்டு தன் தமிழ் எழுத்து திறமையையும் எமக்கு வெளிப்படுத்தியுள்ளார்.

அத்துடன் பல சர்வதேச மகாநாடுகளில்(இந்தியா,மலேசியா,பிரான்ஸ்,இத்தாலி)
பங்கேற்று தன் பேச்சுத்திறனையும் வெளிப்படுத்தி உலக அரங்கில் எம்மூருக்கும்,கிழக்கு மண்ணுக்கும்  பல பெருமைகளை பெற்றுத்தந்துள்ளார்.

மேலும் பலருக்கு திரு.சுகுமார் அவர்களை ஒரு ஆசிரியராக,விரிவுரையாளராக ,எழுத்தாளராக மட்டுமே தெரிந்திருக்கும், ஆனால் அதையும் தாண்டிய இன்னுமொரு திறமையும் கொண்டவர் அவர், ஆம் ஒரு நாடக நடிகர்,தயாரிப்பாளர்,இயக்குனர்,ஒப்பனையாளர் என ஒரு பன்முக தோற்றமும்,திறமையும் மிக்கவர். இதுவரை தயாரித்து நெறியாள்கை செய்த நாடகங்கள் மட்டுமே  ஐம்பதுக்கு மேல்.

இவற்றிற்கும் மேலாக,
ஈழத்து வட மோடி தமிழக தெருக்கூத்து ஆகியவற்றிலும் ஏனைய கூத்துக்களிலும் அறிக்கை ஆராய்ச்சி என துறை சார் ஆற்றல் கொண்டவர்

கிழக்குப் பல்கலைக் கழகத்திலும் உலக நாடுகளிலும் இன்னியத்தை அறிமுகம் செய்து பயிற்சி அளித்தது ஈழத்  தமிழர் அடையாளமாக அதனை முன்னிலைப் படுத்தியதுடன், நோர்வே ,பிரான்ஸ்,இங்கிலாந்து ஆகிய நாடுகளில் அவற்றை பரவலாக்கி அதன் வளர்ச்சிக்கு இன்றுவரை துணைநிற்பவர்

ஈழத் தமிழர்களுக்கான நடன முறையாக ஈழ நாட்டியம் எனும் புத்தாக்கத்தை உலகிற்கு அறிமுகம் செய்தவர்

புலம் பெயர் நாடுகளில் தமிழ் கல்வி பற்றி வள ஆலோசகராக பல்வேறு நாடுகளிலும் அறியப் பட்ட பேராசிரியர்
இவ்வாறு பல்வேறுபட்ட திறமைகளையையும்,அறிவையையும் கொண்டுள்ள எமதூரின் கல்வியாளருக்கு ஒரு மாணவனாக,உறவினனாக என்நன்றியை
தெரிவித்துக்கொள்வதோடு,அவரின் சேவைகள் அனைத்தும்,உள்நாட்டிலும்,புலம்பெயர் தேசத்திலும் இனிதே தொடரந்திட வாழ்த்தி வணங்குகின்றேன். 

--மூதூர் மண்  தமிழ் கூறும் நல்லுலகுக்கு கொடுத்த கொடை.